மேலும் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பவர் மரணம் அடைக்கும்போது கிடைக்கும் க்ளைம் தொகைக்கு வரி கிடையாது என்றும், தற்போதைய நிதியாண்டில் அதாவது 2023ம் ஆண்டு மார்ச் 31ம் வரையான காலத்தில் எந்த பாதிப்பு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது.
புதிய வரி முறை இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்பனை செய்வதற்கான சூழலை கடுமையாக்கி உள்ளது என்றும், இதனால் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் வருமானம் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இன்சூரன்ஸ் பாலிசி என்பது மிகவும் அவசியமானது. ஆனால் இங்கு பலரும் இன்சூரன்ஸ் பாலிசிகளை வரி சேமிப்புக்காக மட்டுமே எடுக்கின்றனர்.