![Budget 2024 - et tamil](https://tamil.economictimes.com/thumb/msid-111355058,imgsize-54408,width-380,height-214,resizemode-75/budget-2024et-tamil-111355058.jpg)
2024ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிறுவனங்களின் பங்கு விற்பனையின் மூலம் எவ்வளவு நிதி திரட்டப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்படும்.
அதாவது ஐஆர்எஃப்சியில் 11.36 சதவீத பங்குகளை குறைக்க அரசாங்கம் முடிவு செய்யலாம். இதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ.7,600 கோடி வருவாய் கிடைக்கும். இந்திய ரயில்வேயின் நிதியுதவி பிரிவில் தற்போது 86.36 சதவீத பங்குகளை அரசு வைத்திருக்கிறது.
ஐஆர்எஃப்சியில் 11.36% பங்குகளை விற்பனை செய்வது குறிப்பாக செபியின் குறைந்தபட்ச பொதுப் பங்குத் தேவையைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இருக்கும். இது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் 25% பொது உரிமையைக் கொண்டிருக்க வேண்டும். இந்த விதிமுறைக்கு இணங்க பங்குகளை அரசு விற்பனை செய்யும்.
பங்குகள் விற்பனையின் மூலமாக அரசு குறிப்பிட்ட அளவு வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலமாக அரசின் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
அதிக லாபம் தரும் SIP returns..எப்படி தொடங்குவது?