Please enable javascript. அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிடும் மத்திய அரசு.... பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.... - budget disinvestment on budget 2024 | The Economic Times Tamil

அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிடும் மத்திய அரசு.... பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு....

Authored by இரா.ரூபாவதி | The Economic Times Tamil | Updated: 29 Jun 2024, 9:20 am

மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் உள்ளிட்ட ரயில், உரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில அரசு நிறுவனங்களில் பங்குகளை நடப்பு நிதியாண்டில் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (IRFC), நேஷனல் ஃபெர்டிலைசர்ஸ் (NFL),ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் (RCF) ஆகியவற்றில் 2024-25ம் நிதியாண்டில் சிறிய அளவு பங்குகளை விற்பனை செய்வது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

 
Budget 2024 - et tamil
மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் உள்ளிட்ட ரயில், உரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில அரசு நிறுவனங்களில் பங்குகளை நடப்பு நிதியாண்டில் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (IRFC), நேஷனல் ஃபெர்டிலைசர்ஸ் (NFL),ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் (RCF) ஆகியவற்றில் 2024-25ம் நிதியாண்டில் சிறிய அளவு பங்குகளை விற்பனை செய்வது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

மத்திய அரசின் நிதி தேவைகளை நிறைவேற்ற பல்வேறு வழிகள் உள்ளன. அதாவது பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய், நிறுவனங்கள் வழங்கும் டிவிடெண்ட், வரி வருவாய் உள்ளிட்ட வழிகள் மட்டுமே உள்ளன. ஆனால் நிதி தேவைகளுக்கு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து வருவாய் ஈட்டும்.


2024ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிறுவனங்களின் பங்கு விற்பனையின் மூலம் எவ்வளவு நிதி திரட்டப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்படும்.

அதாவது ஐஆர்எஃப்சியில் 11.36 சதவீத பங்குகளை குறைக்க அரசாங்கம் முடிவு செய்யலாம். இதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ.7,600 கோடி வருவாய் கிடைக்கும். இந்திய ரயில்வேயின் நிதியுதவி பிரிவில் தற்போது 86.36 சதவீத பங்குகளை அரசு வைத்திருக்கிறது.

ஐஆர்எஃப்சியில் 11.36% பங்குகளை விற்பனை செய்வது குறிப்பாக செபியின் குறைந்தபட்ச பொதுப் பங்குத் தேவையைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இருக்கும். இது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் 25% பொது உரிமையைக் கொண்டிருக்க வேண்டும். இந்த விதிமுறைக்கு இணங்க பங்குகளை அரசு விற்பனை செய்யும்.

மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்தின் 84.83 சதவிகிதம் பங்குகள் அரசுக்கு சொந்தமானது. இதில் 10 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய அரசு இலக்கு நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.

முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை (DIPAM) ஆர்சிஎஃப் நிறுவனத்தின் 10 சதவிகித பங்குகளையும், நேஷனல் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தின் 20 சதவிகித பங்கையும் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. இதன் மூலமாக ரூ. 1,200 கோடி மதிப்பில் விற்பனை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பங்குகள் விற்பனையின் மூலமாக அரசு குறிப்பிட்ட அளவு வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலமாக அரசின் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
அதிக லாபம் தரும் SIP returns..எப்படி தொடங்குவது?


இரா.ரூபாவதி கட்டுரையாளரை பற்றி
இரா.ரூபாவதி Senior Digital Content Producer
இரா.ரூபாவதி, எகனாமிக் டைம்ஸ் தமிழ் டிஜிட்டல் பிரிவில் SENIOR DIGITAL CONTENT PRODUCER பணியாற்றி வருகிறார். 2009 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். தமிழின் முன்னணி ஊடக நிறுவனமான விகடன் குழுமத்தின் நாணயம் விகடன் வார இதழில் பணியாற்றியபோது, பொருளாதாரம், பங்குச்சந்தை, பார்சனல் ஃபைனான்ஸ், இன்சூரன்ஸ் ஆகியவற்றில் அனுபவம் பெற்றார். அங்கு 4 ஆண்டுகள் பணி அனுபவத்துக்குப் பின்னர், தமிழின் முன்னணி தொலைக்காட்சி செய்தி நிறுவனமான நியூஸ் 18 தமிழ் சேனலில் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார். சென்னை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டமும், லயோலா கல்லூரியில் ஊடகத்துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.Read More