மேலும் இந்த ஐபிஓவில் வெளியிடப்பட்ட பங்குகள் க்ரே மார்க்கெட்டில் 17 சதவிகித பிரீமியம் விலையில் வர்த்தகமானதால், பங்குச்சந்தை பட்டியலின் போது அதை விட அதிக விலையில் வர்த்தகத்தை தொடங்கும் என முதலீட்டாளர்களும், சந்தை நிபுணர்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஜூன் 24ம் தேதி அல்லைட் பிளெண்டர்ஸ் நிறுவனம் ஆங்கர் முதலீடு மூலமாக ரூ. 499.1 கோடியை திரட்டியது. இதில் சொசைட்டி ஜெனரல், கோல்ட்மேன் சாக்ஸ், ட்ரூ கேபிடல், பிஎன்பி பரிபாஸ், 360 ஒன் ஸ்பெஷல் ஆப்பர்சூனிட்டி ஃபண்ட், எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஜூபிடர் இந்தியா ஆகியவை முதலீடு செய்துள்ளன.