வாரத்தின் கடைசி நாளில் அதிக லாபம் ஈட்ட அசத்தல் பங்குகள்.... இந்த 3 பங்கை வாங்கினாலே பல மடங்கு லாபம் கிடைக்க வாய்ப்பு...

Authored by இரா.ரூபாவதி | The Economic Times Tamil | Updated: 21 Jun 2024, 10:04 am

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து புதிய உச்சம் அடைந்து வரும் நிலையில் முதலீட்டாளர்கள் எந்த பங்கை வாங்கினால் கூடுதல் லாபம் பார்க்க முடியும் என நிபுணர்கள் பலரும் பங்குகளை பரிந்துரை செய்துள்ளனர். சென்செக்ஸ் 141.34 புள்ளிகள் உயர்ந்து 77,478.93 ஆகவும், நிஃப்டி 50 51.00 புள்ளிகள் அதிகரித்து 23,567.00 ஆகவும் வியாழன் வர்த்தகம் முடிவடைந்தது.

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து புதிய உச்சம் அடைந்து வரும் நிலையில் முதலீட்டாளர்கள் எந்த பங்கை வாங்கினால் கூடுதல் லாபம் பார்க்க முடியும் என நிபுணர்கள் பலரும் பங்குகளை பரிந்துரை செய்துள்ளனர். சென்செக்ஸ் 141.34 புள்ளிகள் உயர்ந்து 77,478.93 ஆகவும், நிஃப்டி 50 51.00 புள்ளிகள் அதிகரித்து 23,567.00 ஆகவும் வியாழன் வர்த்தகம் முடிவடைந்தது.
stock buy or sell - et tamil
அதாவது ஜூன் 20ம் தேதி வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வர்த்தகமானது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் பிரபுதாஸ் லில்லாதேரின் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைத் தலைவர் வைஷாலி பரேக் முதலீட்டாளர்கள் அதிக லாபம் ஈட்ட சில பங்குகளை பரிந்துரை செய்துள்ளார்.


என்எம்டிசி நிறுவனத்தின் பங்கை ரூ. 273.25க்கு வாங்கலாம். இதன் இலக்கு விலை ரூ.286 என்றும், ஸ்டாப்லாஸ் ரூ.267 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாநகர் கேஸ் நிறுவனத்தின் பங்கை ரூ.1506க்கு வாங்கலாம் என்றும், இதன் இலக்கு விலை ரூ.1575 என்றும், ஸ்டாப்லாஸ் ரூ.1470 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கை ரூ.712.50 என்ற விலையில் முதலீட்டாளர்கள் வாங்கலாம். இதன் இலக்கு விலை ரூ.742 என்றும், ஸ்டாப்லாஸ் ரூ.695 என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
SIP என்றால் என்ன?SIP மிகப்பெரிய இலாபத்தை தருமா?


எகனாமிக் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் Share Market சமீபத்திய Business News மற்றும் பிரேக்கிங் செய்திகளைப் படிக்கவும்
இரா.ரூபாவதி கட்டுரையாளரை பற்றி
இரா.ரூபாவதி Senior Digital Content Producer
இரா.ரூபாவதி, எகனாமிக் டைம்ஸ் தமிழ் டிஜிட்டல் பிரிவில் SENIOR DIGITAL CONTENT PRODUCER பணியாற்றி வருகிறார். 2009 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். தமிழின் முன்னணி ஊடக நிறுவனமான விகடன் குழுமத்தின் நாணயம் விகடன் வார இதழில் பணியாற்றியபோது, பொருளாதாரம், பங்குச்சந்தை, பார்சனல் ஃபைனான்ஸ், இன்சூரன்ஸ் ஆகியவற்றில் அனுபவம் பெற்றார். அங்கு 4 ஆண்டுகள் பணி அனுபவத்துக்குப் பின்னர், தமிழின் முன்னணி தொலைக்காட்சி செய்தி நிறுவனமான நியூஸ் 18 தமிழ் சேனலில் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார். சென்னை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டமும், லயோலா கல்லூரியில் ஊடகத்துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.Read More