Please enable javascript.this correct time for reliance industries share buying :சாதனைப் படைத்த ரிலையன்ஸ் நிறுவனம்.... இப்போது பங்கை வாங்கினால் நல்ல லாபம் பார்க்க முடியுமா? - The Economic Times Tamil

சாதனைப் படைத்த ரிலையன்ஸ் நிறுவனம்.... இப்போது பங்கை வாங்கினால் நல்ல லாபம் பார்க்க முடியுமா?

Authored by இரா.ரூபாவதி | The Economic Times Tamil | Updated: 28 Jun 2024, 9:47 pm

நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் சந்தை மூலதனம் ரூ. 21 லட்சம் கோடி என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதையடுத்து ரூ.21 லட்சம் சந்தை மூலதனத்தை எட்டிய முதல் நிறுவனமான மாறியுள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் கட்டணத்தை உயர்த்தி இருப்பதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். நிறுவனத்தின் சந்தை மூலதனம் மட்டும் இல்லாமல் பங்கின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூன் 28ம் தேதியான இன்றைய வர்த்தகத்தில் பங்கின் விலை 2 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்து என் எஸ் இ சந்தையில் ரூ.3,129.85 என்ற நிலையை அடைந்துள்ளது.

 
reliance industries - et tamil
நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் சந்தை மூலதனம் ரூ. 21 லட்சம் கோடி என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதையடுத்து ரூ.21 லட்சம் சந்தை மூலதனத்தை எட்டிய முதல் நிறுவனமான மாறியுள்ளது.
இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் கட்டணத்தை உயர்த்தி இருப்பதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். நிறுவனத்தின் சந்தை மூலதனம் மட்டும் இல்லாமல் பங்கின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூன் 28ம் தேதியான இன்றைய வர்த்தகத்தில் பங்கின் விலை 2 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்து என் எஸ் இ சந்தையில் ரூ.3,129.85 என்ற நிலையை அடைந்துள்ளது.

அதாவது ரிலையன்ஸ் நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கான கட்டணத்தை உயர்த்தி உள்ளதால் பங்கின் விலை இனி வரும் நாட்களில் 15 சதவிகிதம் வரை உயரும் என தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதாவது மார்கன் ஸ்டான்லி மற்றும் ஜெஃபரீஸ் போன்ற உலகளாவிய தரகு நிறுவனங்கள் இந்த கணிப்பை தெரிவித்துள்ளன.

ஜியோவின் கட்டண உயர்வு பெரும்பாலும் சந்தையின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருந்தது. எனவே நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


ஜெஃப்ரிஸ்

ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு கட்டணத்தை 13-25% உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் ஜெஃப்ரிஸ் தரகு நிறுவனம் ரிலையன்ஸ் பங்கை வாங்கலாம் என தெரிவித்துள்ளது. ஜியோ 2024 - 2027ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 18- 26% இருக்கும் என கணித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் டார்கெட் விலை ரூ.3,580 என ஜெஃப்ரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மோர்கன் ஸ்டான்லி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கட்டண உயர்வு காரணமாக நிறுவனத்தின் வருவாய் 2027ம் ஆண்டில் 20 சதவிகிதம் வரை உயர வாய்ப்புள்ளது. மோர்கன் ஸ்டான்லி ரிலையன்ஸின் இலக்கு விலை ரூ.3,046 என தெரிவித்துள்ளது. மேலும் இந்த பங்குக்கு ஒவர்வெயிட்டேஜ் என்ற மதிப்பிட்டையும் வழங்கியுள்ளது.
jp morgan bond index-ல் எந்த இடத்தில் உள்ளனர்?



எகனாமிக் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் Share Market சமீபத்திய Business News மற்றும் பிரேக்கிங் செய்திகளைப் படிக்கவும்
இரா.ரூபாவதி கட்டுரையாளரை பற்றி
இரா.ரூபாவதி Senior Digital Content Producer
இரா.ரூபாவதி, எகனாமிக் டைம்ஸ் தமிழ் டிஜிட்டல் பிரிவில் SENIOR DIGITAL CONTENT PRODUCER பணியாற்றி வருகிறார். 2009 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். தமிழின் முன்னணி ஊடக நிறுவனமான விகடன் குழுமத்தின் நாணயம் விகடன் வார இதழில் பணியாற்றியபோது, பொருளாதாரம், பங்குச்சந்தை, பார்சனல் ஃபைனான்ஸ், இன்சூரன்ஸ் ஆகியவற்றில் அனுபவம் பெற்றார். அங்கு 4 ஆண்டுகள் பணி அனுபவத்துக்குப் பின்னர், தமிழின் முன்னணி தொலைக்காட்சி செய்தி நிறுவனமான நியூஸ் 18 தமிழ் சேனலில் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார். சென்னை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டமும், லயோலா கல்லூரியில் ஊடகத்துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.Read More