ஜூலை 2ம் தேதியில் முதலீட்டாளர்கள் வாங்க வேண்டிய பங்குகள்....

Authored by இரா.ரூபாவதி | The Economic Times Tamil | Updated: 2 Jul 2024, 7:59 am

ஜூலை 1ம் தேதி அன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்தன. நிஃப்டி 50 குறியீடு 131 புள்ளிகள் உயர்ந்து 24,141 என்ற புதிய உச்சத்தை தொட்டது. சென்செக்ஸ் 443 புள்ளிகள் உயர்ந்து 79,476 ஆகவும், வங்கி நிஃப்டி குறியீடு 232 புள்ளிகள் அதிகரித்து 52,574 ஆகவும் முடிந்தது. இந்த நிலையில் ஜூலை 2ம் தேதியான இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் வாங்க வேண்டிய பங்குகள் எவை என்பதை பிரபுதாஸ் லில்லாதேரின் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைத் தலைவர் வைஷாலி பரேக் பரிந்துரை செய்துள்ளார்.

ஜூலை 1ம் தேதி அன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்தன. நிஃப்டி 50 குறியீடு 131 புள்ளிகள் உயர்ந்து 24,141 என்ற புதிய உச்சத்தை தொட்டது. சென்செக்ஸ் 443 புள்ளிகள் உயர்ந்து 79,476 ஆகவும், வங்கி நிஃப்டி குறியீடு 232 புள்ளிகள் அதிகரித்து 52,574 ஆகவும் முடிந்தது.
Stock buy or sell - et tamil
இந்த நிலையில் ஜூலை 2ம் தேதியான இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் வாங்க வேண்டிய பங்குகள் எவை என்பதை பிரபுதாஸ் லில்லாதேரின் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைத் தலைவர் வைஷாலி பரேக் பரிந்துரை செய்துள்ளார்.

பிர்லாசாஃப்ட் நிறுவனத்தின் பங்கை ரூ.717.60க்கு வாங்கவும், இலக்கு விலை ரூ.745, ஸ்டாப்லாஸ் ரூ.703 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chambal Fertilisers நிறுவனத்தின் பங்கை ரூ.523.15க்கு வாங்கலாம் என்றும், அதன் இலக்கு விலை ரூ.545, ஸ்டாப்லாஸ் ரூ.512 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கை ரூ.705 வாங்கலாம். இலக்கு விலை ரூ.732 என்றும், ஸ்டாப் லாஸ் ரூ.690 கூறப்பட்டுள்ளது.
Disclaimer: இங்கு கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் நிபுணரின் தனிப்பட்ட கருத்து. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன், நிதி ஆலோசகரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.
stock market-ல் மொத்தம் எத்தனை நிறுவனங்கள் listed ஆகி உள்ளன?


எகனாமிக் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் Share Market சமீபத்திய Business News மற்றும் பிரேக்கிங் செய்திகளைப் படிக்கவும்
இரா.ரூபாவதி கட்டுரையாளரை பற்றி
இரா.ரூபாவதி Senior Digital Content Producer
இரா.ரூபாவதி, எகனாமிக் டைம்ஸ் தமிழ் டிஜிட்டல் பிரிவில் SENIOR DIGITAL CONTENT PRODUCER பணியாற்றி வருகிறார். 2009 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். தமிழின் முன்னணி ஊடக நிறுவனமான விகடன் குழுமத்தின் நாணயம் விகடன் வார இதழில் பணியாற்றியபோது, பொருளாதாரம், பங்குச்சந்தை, பார்சனல் ஃபைனான்ஸ், இன்சூரன்ஸ் ஆகியவற்றில் அனுபவம் பெற்றார். அங்கு 4 ஆண்டுகள் பணி அனுபவத்துக்குப் பின்னர், தமிழின் முன்னணி தொலைக்காட்சி செய்தி நிறுவனமான நியூஸ் 18 தமிழ் சேனலில் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார். சென்னை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டமும், லயோலா கல்லூரியில் ஊடகத்துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.Read More