Please enable javascript.stock to watch: இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தை தீர்மானிக்கும் யெஸ் வங்கி, இண்டிகோ பங்குகள்.... முதலீட்டுக்கு முன்பு இதையெல்லாம் தெரிந்து கொள்வது அவசியம்... - The Economic Times Tamil

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தை தீர்மானிக்கும் யெஸ் வங்கி, இண்டிகோ பங்குகள்.... முதலீட்டுக்கு முன்பு இதையெல்லாம் தெரிந்து கொள்வது அவசியம்...

Authored by இரா.ரூபாவதி | The Economic Times Tamil | Updated: 21 Jun 2024, 9:30 am

வியாழன் அன்று இந்திய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ், நிஃப்டி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து வர்த்தகமானது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஜூன் 21ம் தேதியான இன்றைய வர்த்தகத்தில், யெஸ் வங்கி, ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர், ஓஎன்ஜிசி, இண்டிகோ, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட பங்குகளை போன்றவற்றின் பங்குகள் பல்வேறு செய்தி முன்னேற்றங்கள் காரணமாக கவனம் செலுத்தும்.

 
Share Market - et tamil
வியாழன் அன்று இந்திய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ், நிஃப்டி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து வர்த்தகமானது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஜூன் 21ம் தேதியான இன்றைய வர்த்தகத்தில், யெஸ் வங்கி, ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர், ஓஎன்ஜிசி, இண்டிகோ, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட பங்குகளை போன்றவற்றின் பங்குகள் பல்வேறு செய்தி முன்னேற்றங்கள் காரணமாக கவனம் செலுத்தும்.
யெஸ் வங்கி

யெஸ் வங்கியின் வாரியம் ஜூன் 25 அன்று கூட உள்ளது. இதில் கடன் பத்திரங்கள் மூலமாக நிதி திரட்டும் திட்டம் குறித்து பரிசீலனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

இண்டிகோ

இண்டிகோ விமானத்தின் கேடட் பைலட் திட்டத்தின் கீழ், புதிய விமானிகளுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதாவது ஜூனியர் முதல் அதிகாரிகளாகப் பயிற்றுவிப்பதற்காக கருடா ஏவியேஷன் அகாடமியுடன் இணைந்துள்ளதாக நோ-ஃபிரில்ஸ் கேரியர் இண்டிகோ தெரிவித்துள்ளது.

ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர்

தனியார் சமபங்கு நிறுவனமான ஒலிம்பஸ் கேபிடல் ஏசியா, ஹெல்த்கேர் சேவை வழங்கும் நிறுவனமான ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேரில் 5% பங்குகளை ஒரு பிளாக் டீல் மூலம் விற்பனை செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாமார்ட் இன்டர்மேஷ்

இந்தியாமார்ட் இன்டர்மேஷ் 2025ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு தினேஷ் சந்திர அகர்வாலை எம் டி மற்றும் சி இ ஓவாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் முதன்மை நிதி அதிகாரியாக சாயானி மனோஜ் சுந்தரை நியமித்துள்ளதாகவும், இவர் ஜூன் 21ம் தேதி முதல் தனது பணியை தொடங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓ.என்.ஜி.சி
பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தேவேந்திர குமார் நியமிக்கப்படுவதற்கு அதன் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
SIP என்றால் என்ன?SIP மிகப்பெரிய இலாபத்தை தருமா?


எகனாமிக் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் Share Market சமீபத்திய Business News மற்றும் பிரேக்கிங் செய்திகளைப் படிக்கவும்
இரா.ரூபாவதி கட்டுரையாளரை பற்றி
இரா.ரூபாவதி Senior Digital Content Producer
இரா.ரூபாவதி, எகனாமிக் டைம்ஸ் தமிழ் டிஜிட்டல் பிரிவில் SENIOR DIGITAL CONTENT PRODUCER பணியாற்றி வருகிறார். 2009 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். தமிழின் முன்னணி ஊடக நிறுவனமான விகடன் குழுமத்தின் நாணயம் விகடன் வார இதழில் பணியாற்றியபோது, பொருளாதாரம், பங்குச்சந்தை, பார்சனல் ஃபைனான்ஸ், இன்சூரன்ஸ் ஆகியவற்றில் அனுபவம் பெற்றார். அங்கு 4 ஆண்டுகள் பணி அனுபவத்துக்குப் பின்னர், தமிழின் முன்னணி தொலைக்காட்சி செய்தி நிறுவனமான நியூஸ் 18 தமிழ் சேனலில் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார். சென்னை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டமும், லயோலா கல்லூரியில் ஊடகத்துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.Read More