Please enable javascript.Ather Energy soon to release ipo:விரைவில் ஐபிஓ வெளியிடும் ஏதர் எனர்ஜி... இந்த ஆண்டு இறுதிக்கு ஐபிஓ வெளியிட திட்டம்... - The Economic Times Tamil

விரைவில் ஐபிஓ வெளியிடும் ஏதர் எனர்ஜி... இந்த ஆண்டு இறுதிக்கு ஐபிஓ வெளியிட திட்டம்...

Authored by இரா.ரூபாவதி | The Economic Times Tamil | Updated: 25 Jun 2024, 4:17 pm

மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான ஏதர் எனர்ஜி நிறுவனம் விரைவில் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதற்கான பணிகளை தொடங்கியுள்ளதாக எதர் எனர்ஜி நிறுவனத்தின் வருடாந்திர பொதுத்தில் தெரிவிக்கப்பட்டது. ஸ்டார்ட் அப் நிறுவனம் பெருநிறுவனமான மாறும் என்றும், 2024ம் ஆண்டு இறுதிக்குள் ஐபிஓ பணிகள் நிறைவடையும் என்றும் தெரிவித்துள்ளது.

 
Ather Energy- et tamil
மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான ஏதர் எனர்ஜி நிறுவனம் விரைவில் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதற்கான பணிகளை தொடங்கியுள்ளதாக எதர் எனர்ஜி நிறுவனத்தின் வருடாந்திர பொதுத்தில் தெரிவிக்கப்பட்டது. ஸ்டார்ட் அப் நிறுவனம் பெருநிறுவனமான மாறும் என்றும், 2024ம் ஆண்டு இறுதிக்குள் ஐபிஓ பணிகள் நிறைவடையும் என்றும் தெரிவித்துள்ளது.
மின்சார வாகன உற்பத்தி நிறுவனத்தின் பங்கு மூலதனம் ரூ.93.6 லட்சத்தில் இருந்து ரூ. 50 கோடியாக உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ட்ரைட் வென்ச்சர்ஸ் மற்றும் அதன் இணை நிறுவனர்களிடமிருந்து கடன் மற்றும் பங்குகளின் கலவையின் மூலம் ஏதர் எனர்ஜி ரூ.286 கோடியை திரட்டியது. ஸ்ட்ரைட் வென்ச்சர்ஸ் கடன் பத்திரங்கள் மூலம் கிட்டத்தட்ட ரூ.200 கோடி முதலீடு செய்துள்ளது. இணை நிறுவனர் தருண் மேத்தா மற்றும் ஸ்வப்னில் ஜெயின் ஆகியோர் ரூ.43.28 கோடி முதலீடு செய்துள்ளனர்.

2024ம் ஆண்டுக்குள் ஏதர் எனர்ஜி நிறுவனம் 2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஐபிஓ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஹெச் எஸ் பி சி ஹோல்டிங்ஸ், நேமுரா ஹோல்டிங்ஸ், ஜேபிமார்கன் ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டுக்கான பணிகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், ஏதர் எனர்ஜியின் 2.2 சதவீத கூடுதல் பங்குகளை ரூ.124 கோடிக்கு வாங்கியது. இதையடுத்து ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக மாறியுள்ளது. இப்போது நிறுவனத்தின் மொத்த பங்குகளில் கிட்டத்தட்ட 39 சதவீதத்தை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வைத்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கூடுதலாக ரூ.140 கோடி முதலீடு செய்தது.

மேலும் ஏதர் நிறுவனம் ரிஸ்தா மாடல் இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு 4,50,000 ஸ்கூட்டர்களின் மொத்த உற்பத்தித் திறனைக் கொண்டது எதர் நிறுவனம். மேலும் இனி வரும் நாட்களில் அதன் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 1,50,000 உயர்த்த திட்டமிட்டுள்ளது.

தருண் மேத்தா மற்றும் ஸ்வப்னில் ஜெயின் ஆகியோரால் 2013ம் ஆண்டு ஏதர் எனர்ஜி நிறுவனம் தொடங்கப்பட்டது. நிறுவனம் 2022ம் ஒரு தொடர் E சுற்றில் சுமார் $128 மில்லியன் நிதி திரட்டியது.

எதர் நிறுவனம் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் 2000க்கும் மேற்பட்ட சார்ஜிங் பாயிண்டுகளுடன் செயல்பட்டு வருகிறது. அதாவது பெங்களூரு, டெல்லி, சென்னை, ஹைதராபாத், புனே, ஜெய்ப்பூர், கொச்சி, அகமதாபாத், மும்பை மற்றும் கொல்கத்தா உட்பட 215 நகரங்களில் செயல்படுகிறது.



இரா.ரூபாவதி கட்டுரையாளரை பற்றி
இரா.ரூபாவதி Senior Digital Content Producer
இரா.ரூபாவதி, எகனாமிக் டைம்ஸ் தமிழ் டிஜிட்டல் பிரிவில் SENIOR DIGITAL CONTENT PRODUCER பணியாற்றி வருகிறார். 2009 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். தமிழின் முன்னணி ஊடக நிறுவனமான விகடன் குழுமத்தின் நாணயம் விகடன் வார இதழில் பணியாற்றியபோது, பொருளாதாரம், பங்குச்சந்தை, பார்சனல் ஃபைனான்ஸ், இன்சூரன்ஸ் ஆகியவற்றில் அனுபவம் பெற்றார். அங்கு 4 ஆண்டுகள் பணி அனுபவத்துக்குப் பின்னர், தமிழின் முன்னணி தொலைக்காட்சி செய்தி நிறுவனமான நியூஸ் 18 தமிழ் சேனலில் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார். சென்னை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டமும், லயோலா கல்லூரியில் ஊடகத்துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.Read More