இப்போது தேசிய கவுன்சிலின் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா (பணியாளர்கள் தரப்பு, மத்திய அரசு ஊழியர்களுக்கான கூட்டு ஆலோசனை இயந்திரம்) அரசுக்கு கடிதம் எழுதி இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் சம்பள கமிஷன் அமைக்கப்படுகிறது. எனவே, எட்டாவது ஊதியக் குழு 2026-ம் ஆண்டு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எட்டாவது ஊதியக் குழுவில், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 25 முதல் 35 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் மாதம் ரூ.26 ஆயிரமாக இருக்கும். ஃபிட்மென்ட் காரணி 2.57ல் இருந்து 3.68 ஆக அதிகரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பள கமிஷன் என்பது அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு அமைப்பு. இது மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பு, அலவன்ஸ் மற்றும் சலுகைகளை மதிப்பாய்வு செய்து, அவற்றில் மாற்றங்களை பரிந்துரைக்கிறது. பணவீக்கம் போன்ற வெளிப்புற காரணிகளைக் கருத்தில் கொண்டு தேவையான மாற்றங்களை இந்த அமைப்பு கொண்டு வரும்.
இந்த ஆணையம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுகிறது. பிப்ரவரி 28, 2014 அன்று, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் 7வது ஊதியக் குழுவை அமைத்தார். இந்த ஆணையம் தனது அறிக்கையை நவம்பர் 19, 2015 அன்று அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது, அதன் பரிந்துரைகள் ஜனவரி 1, 2016 முதல் அமல்படுத்தப்பட்டது.
8வது ஊதியக்குழு எப்போது அமைக்கப்படும்?
நமது நாட்டில் 10 வருட இடைவெளியில் சம்பள கமிஷன் உருவாக்கப்பட்டது. எட்டாவது ஊதியக் குழு ஜனவரி 1, 2026க்குள் அமைக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மோடி அரசு மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்களிடையே எட்டாவது ஊதியக் குழு குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய குழு!
ஆலோசனைக் குழுவின் செயலாளர் சிவகோபால் மிஸ்ரா, தற்போதைய பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு புதிய ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவைச் செயலருக்கு எழுதிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். 2015ஆம் ஆண்டை விட அரசின் வருவாய் இரட்டிப்பாகியுள்ளது என்றார். வரி வசூலும் அதிகரித்துள்ளது. ஆனால், பணவீக்கத்துக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படவில்லை.
கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, அரசாங்க வருவாய் மற்றும் பணவீக்கம் இரண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது. பணவீக்கம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வாங்கும் திறனை கணிசமாகக் குறைத்துள்ளது. இதற்காக 10 ஆண்டுகள் காத்திருக்கக்கூடாது என்பது அனைவரின் கருத்தாகும்.
எனவே, எட்டாவது ஊதியக் குழுவை விரைவில் அமைத்து, ஊழியர்களின் சம்பளம் மற்றும் அலவன்ஸ்களை திருத்தியமைக்க வேண்டும், கடந்த பத்தாண்டுகளில் மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம் குறைந்துள்ளது. இதனால் தற்போதுள்ள ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. ஊதிய மேட்ரிக்ஸை அவ்வப்போது மதிப்பாய்வு செய்யவும் கடிதம் பரிந்துரைக்கிறது.