ஹேப்பி நியூஸ்!
![ஹேப்பி நியூஸ்! ஹேப்பி நியூஸ்!](https://static.langimg.com/thumb/111495155/samayam-tamil-111495155.jpg?imgsize=87298&width=680&resizemode=3)
2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்னும் சில நாட்களில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்படும். இதுபோன்ற சூழலில், இந்த ஜூலை மாதத்திலேயே மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2 நல்ல செய்திகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலுவைத் தொகை!
![நிலுவைத் தொகை! நிலுவைத் தொகை!](https://static.langimg.com/thumb/111495154/samayam-tamil-111495154.jpg?imgsize=55638&width=680&resizemode=3)
மத்திய அரசில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் அலவன்ஸ் மற்றும் சம்பளம் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையும் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமருக்கு கடிதம்!
![பிரதமருக்கு கடிதம்! பிரதமருக்கு கடிதம்!](https://static.langimg.com/thumb/111495152/samayam-tamil-111495152.jpg?imgsize=100372&width=680&resizemode=3)
கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய ஊழியர்களின் தேசிய கவுன்சிலின் கூட்டு ஆலோசனைக் குழுவின் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார்.
4 சதவீத உயர்வு!
![4 சதவீத உயர்வு! 4 சதவீத உயர்வு!](https://static.langimg.com/thumb/111495151/samayam-tamil-111495151.jpg?imgsize=71026&width=680&resizemode=3)
2024 ஜனவரி மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மத்திய அரசு 4 சதவீதம் உயர்த்தியது. அதன்பிறகு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்ந்தது. இதுபோன்ற சூழலில் நடப்பு ஜூலை மாதத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை முதல் அமல்!
![ஜூலை முதல் அமல்! ஜூலை முதல் அமல்!](https://static.langimg.com/thumb/111495150/samayam-tamil-111495150.jpg?imgsize=60432&width=680&resizemode=3)
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஜூலை மாத அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் வரும் என்று கூறப்படுகிறது. ஆனால் அது ஜூலை முதல் அமலுக்கு வரும்.
கணக்கில் வரும் பணம்!
![கணக்கில் வரும் பணம்! கணக்கில் வரும் பணம்!](https://static.langimg.com/thumb/111495149/samayam-tamil-111495149.jpg?imgsize=78776&width=680&resizemode=3)
மற்றொரு நல்ல செய்தி என்னவென்றால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்குகளில் 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை அரசு செலுத்தலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
அடுத்த உயர்வு!
![அடுத்த உயர்வு! அடுத்த உயர்வு!](https://static.langimg.com/thumb/111495148/samayam-tamil-111495148.jpg?imgsize=79142&width=680&resizemode=3)
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகிறது. கடைசியாக ஜனவரி மாதத்தில் 4 சதவீதம் உயர்த்தப்பட்டது. அனைத்திந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் (AICPI) அடிப்படையில்தான் இந்த உயர்வு இருக்கும்.
அகவிலைப்படி கணக்கீடு!
![அகவிலைப்படி கணக்கீடு! அகவிலைப்படி கணக்கீடு!](https://static.langimg.com/thumb/111495147/samayam-tamil-111495147.jpg?imgsize=44668&width=680&resizemode=3)
ஜனவரி மாதத்திற்கான பணவீக்க விகிதம் முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான AICPI குறியீட்டு எண்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஜூலை மாதத்திற்கான பணவீக்க விகிதம் ஜனவரி முதல் ஜூன் வரையிலான AICPI குறியீட்டு எண்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
காத்திருக்கும் ஊழியர்கள்!
![காத்திருக்கும் ஊழியர்கள்! காத்திருக்கும் ஊழியர்கள்!](https://static.langimg.com/thumb/111495146/samayam-tamil-111495146.jpg?imgsize=34344&width=680&resizemode=3)
இந்த மதிப்பீடுகளை வைத்து அகவிலைப்படி எவ்வளவு உயரும் என்று ஊழியர்கள் காத்திருக்கின்றனர். மோடி அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதரார்களுக்கும் இதுபோன்ற சலுகைகளை அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, மத்திய பட்ஜெட்டிலும் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகலாம். எனினும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.