Please enable javascript.Pm Surya Ghar Muft Bijli Yojana,ரூ.78,000 மானியம், 300 யூனிட் இலவச மின்சாரம்.. கரண்ட் பில் பற்றிய கவலைகளுக்கு முற்றுப்புள்ளி! - pm surya ghar muft bijli yojana scheme benefits and how to apply - Samayam Tamil

ரூ.78,000 மானியம், 300 யூனிட் இலவச மின்சாரம்.. கரண்ட் பில் பற்றிய கவலைகளுக்கு முற்றுப்புள்ளி!

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 26 Jun 2024, 3:13 pm
Subscribe

'பிஎம் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா' திட்டத்தின் வாயிலாக மாதந்தோறும் 300 யூனிட் இலவசமாக மின்சாரம் பெறலாம். இத்திட்டம் பற்றி தற்போது விரிவாக பார்க்கலாம்.

மின்சார கட்டணம்
மின்சார கட்டணம்
2024-25 பட்ஜெட்டில் 'பிஎம் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா' என்ற திட்டத்தை அறிவித்தார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதன் மூலமாக மின் கட்டணத்தில் பணத்தை மிச்சப்படுத்தலாம். இதுப்பற்றி தற்போது பார்க்கலாம்.

நாளுக்கு நாள் விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. வீட்டு மின்சார பயன்பாட்டிற்கு தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் போது யூனிட்டிற்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் மின்சார கட்டணத்தை சமாளிக்க பிஎம் சூர்யா கர் முஃப்டீ பிஜிலி யோஜனா திட்டம் பெரியளவில் உதவியாக உள்ளது. இத்திட்டம் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக வீட்டின் மின்சார செலவை குறைப்பது உள்ளது.

மேலும், வீட்டு மேற்கூரையில் சோலார் பேனல் பொருத்த ஒன்றிய அரசு சார்பில் ரூ.78,000 மானியமாக வழங்கப்படுகிறது. இந்த சோலார் பேனல் மூலமாக வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை பயன்படுத்தி விட்டு, அரசுக்கு விற்பனை செய்து லாபம் பார்க்க முடியும்.1 கிலோவாட் சிஸ்டத்திற்கு ரூ.30,000 ரூபாய், 2 கிலோவாட் சிஸ்டத்திற்கு ரூ.60,000, 3 கிலோவாட் சிஸ்டத்திற்கு ரூ.78,000 வரை மானியம் இந்த திட்டத்தின் வாயிலாக வழங்கப்படுகிறது.

மாதம் ரூ.50,000 வருமானம் தரும் சூப்பரான திட்டம்.. ஒய்வுகாலத்தை பற்றிய கவலையே வேண்டாம்!

பிஎம் சூர்யா கர் முஃப்டீ பிஜிலி யோஜனா திட்டத்தின் வாயிலாக பயன்பெற அவர் இந்திய குடியுரிமை பெற்றவராகவும், மேற்கூரை கொண்ட சொந்த வீடு கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

பிஎம் சூர்யா கர் முஃப்டீ பிஜிலி யோஜனா pmsuryaghar.gov.in என்ற போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம். இதில் மின்சார விநியோக நிறுவனத்தை தேர்வு செய்து நுகர்வோர் எண்,பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

டிரைவிங் லைசென்ஸ் காணாமல் போய் விட்டதா.? கவலையே வேண்டாம்: ஈசியா டூப்ளிகேட் லைசென்ஸ் வாங்கலாம்!

இதனையடுத்து லாக் இன் செய்து மேற்கூரை சோலாருக்கு விண்ணப்பிக்க வேண்டும். சோலார் பேனல் நிறுவன விவரத்தை குறிப்பிட்டு நெட் மீட்டருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். இதனையடுத்து போர்ட்டல் வாயிலாக கமிஷன் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், போர்ட்டலில் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ரத்து செய்யப்பட்ட காசோலை (செக்) குறித்த விவரங்களை சமர்பிக்க வேண்டும். இந்த நடைமுறையை பாலோ செய்த பின் 30 நாட்களுக்குள் பதிவு செய்த வங்கி கணக்கிற்கு மானியம் அனுப்பப்படும்.
ஆஷிக் முகமது
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா மற்றும் வர்த்தகம், பங்குச்சந்தை சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்