Please enable javascript.Multibagger Penny Stock,50 லட்சத்தை அள்ளிக் கொடுத்த பென்னி பங்கு.. வெறும் 35 ரூபாய் மட்டுமே.. வாங்கிப் போடலாம்! - this multibagger penny stock of spright agro ltd gave 50 lakh income in quick time - Samayam Tamil

50 லட்சத்தை அள்ளிக் கொடுத்த பென்னி பங்கு.. வெறும் 35 ரூபாய் மட்டுமே.. வாங்கிப் போடலாம்!

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 19 May 2024, 9:40 am
Subscribe

இந்த பென்னி பங்கு ஒரே வருடத்தில் ஒரு லட்சம் ரூபாயை 50 லட்சம் ரூபாயாக மாற்றியுள்ளது. முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு.

penny stocks
பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பார்க்க நினைத்தால் உங்களுக்கு அருமையான ஒரு வாய்ப்பு வந்துள்ளது. ஒரு பென்னி பங்கு 1 லட்சம் ரூபாய் முதலீட்டை ஒரு வருடத்தில் 50 லட்சமாக மாற்றியுள்ளது. ஸ்ப்ரைட் அக்ரோ லிமிடெட் நிறுவனத்தின் (Spright Agro Limited) பங்குகள் தான் இந்த அளவுக்கு வருமானம் தந்துள்ளன. இந்த நிறுவனத்தின் பங்குகள் ஓராண்டில் 5091 சதவீதம் லாபம் கொடுத்துள்ளன.

இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் தற்போதைய விலை ரூ.35.30 ஆக உள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இந்தப் பங்கின் விலை 68 பைசா மட்டுமே. அதன் 6 மாத முடிவுகளைப் பார்த்தால், இந்த காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் பங்கு சுமார் 672 சதவீத லாபத்தை அளித்துள்ளது. இந்நிறுவனத்தின் பங்குகள் 2021ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. அப்போது அதன் விலை 36 பைசா மட்டுமே. இப்படிப்பட்ட சூழலில் சுமார் 3 வருடங்களில் 9705 சதவீத வருமானத்தை இந்த பங்குகள் அளித்துள்ளன.

விவசாயம் சார்ந்த பொருட்களில் வணிகம் செய்யும் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1809 கோடி ஆகும். மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.44 கோடியாக இருந்தது. இந்நிறுவனம் ரூ.5.78 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

கவனம் தேவை!

பென்னி பங்குகளில் முதலீடு செய்வது ஆபத்தானது. இந்த பங்குகள் எவ்வளவு வேகமாக உயருகிறதோ, அவ்வளவு வேகமாக வீழ்ச்சியடையவும் செய்யும். எனவே நீங்கள் பென்னி பங்குகளில் முதலீடு செய்ய விரும்பினால் அவற்றில் பெரிய தொகையை செலவிட வேண்டாம்.

முதலீடு செய்யும் போது கீழ்க்காணும் விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

  • ஒரு பென்னி பங்கு வீழ்ச்சியடைந்து, அதில் லோயர் சர்க்யூட் இருக்கும்போது அதில் முதலீடு செய்ய வேண்டாம்.

  • எந்த ஒரு பென்னி பங்கிலும் முதலீடு செய்வதற்கு முன் அந்த நிறுவனத்தின் நிதி விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

  • சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம். அதில் கூறப்படும் விஷயங்களை நம்பி ஏமாந்து விடக் கூடாது. ஏனெனில் அது பொய்யாகவும் இருக்கலாம்.

  • நீங்கள் பென்னி பங்குகளில் முதலீடு செய்ய விரும்பினால் அதை நீண்ட காலத்திற்கு செய்ய வேண்டாம். குறுகிய காலத்திற்கு முதலீடு செய்தால் நல்லது.

  • பென்னி பங்குகளில் உள்ள அபாயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அதிக ரிஸ்க் உள்ள பங்குகளை வாங்குவதை தவிர்க்கலாம்.
செந்தில் குமார்
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்