Please enable javascript.மெட்ரோ ரயில் சேவை,2ம் கட்ட மெட்ரோ திட்டம்: பூந்தமல்லி - போரூர் உயர்மட்ட வழித்தடம்... வார்ப்புப் பணிகள் நிறைவு! - cmrl completing all precast elements between poonamallee bypass and porur for phase 2 project - Samayam Tamil

2ம் கட்ட மெட்ரோ திட்டம்: பூந்தமல்லி - போரூர் உயர்மட்ட வழித்தடம்... வார்ப்புப் பணிகள் நிறைவு!

Authored byரம்யா. S | Samayam Tamil 27 Jun 2024, 9:44 pm
Subscribe

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில், பூந்தமல்லி புறவழிச்சாலை மற்றும் போரூர் இடையேயான உயர்மட்ட வழித்தடத்தில் கட்டுமானத்திற்கான தேவையான அனைத்து வார்ப்புப் பணிகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் சேவை
சென்னை மெட்ரோ ரயில் சேவை
சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது சென்னையின் பொதுப் போக்குவரத்தில் மிக முக்கிய இடத்தினை பெற்றுள்ளது. மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் சுமார் 3 லட்சம் பயணிகள் வரை பயணம் மேற்கொள்கின்றனர்.

மெட்ரோ ரயில் சேவை
சென்னையில் முதல் கட்டத்தில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் - விம்கோ நகர், பரங்கிமலை - சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில் இயங்குகிறது.

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்
சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 116 கிலோ மீட்டர் தூரத்துக்கு , சுமார் ரூ.63,246 கோடி செலவில் மெட்ரோ பணிகள் நடைபெறுகின்றன.

மெட்ரோ கட்டுமான பணி
2ம் கட்ட திட்டத்தில் மாதவரம் பால் பண்ணை - சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பணிமனை, மாதவரம் பால் பண்ணை - சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான மெட்ரோ கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

பூந்தமல்லி - போரூர்
இந்த நிலையில் மெட்ரோ 2ம் கட்டம் 4வது வழித்தடத்தில் பூந்தமல்லி புறவழிச்சாலை மற்றும் போரூர் இடையேயான உயர்மட்ட வழித்தடத்தில் கட்டுமானத்திற்கான தேவையான அனைத்து முன்னமைக்கப்பட்ட வார்ப்புப் பணிகளை இன்று வெற்றிகரமாக முடிக்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் நிறுவனம்
இதன் மூலம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஒரு குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது. இந்த பணியில் 2885 முன் வார்ப்பு கூறுகள் அடங்கிய U-Girders, pier arms, portal beams மற்றும் 18 வகையான pier caps ஆகியவை அடங்கும். இவை கோலப்பஞ்சேரியில் உள்ள HEC-KEC கூட்டமைப்பு நிறுவனத்தில் வார்க்கப்பட்டவை. மேலும், முழு பணியும் பாதுகாப்பாக முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரம்யா. S
எழுத்தாளர் பற்றி
ரம்யா. S
நான் ரம்யா தமிழ் இலக்கியம் கற்றுள்ளேன். ஊடகம் மீதான ஆர்வத்தால் இதழியல் துறையை தேர்ந்தெடுத்தேன். இரண்டு வருடம் பத்திரிகை துறையில் அனுபவம் உள்ளது. ஊடகம் சார்ந்த எனது பார்வையை விரிவுபடுத்தி அதில் அனுபவம் பெரும் நோக்கோடு தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் டிஜிட்டல் ஊடகத்தில் இணைந்துள்ளேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்