Please enable javascript.தேர்வுக்கு பயந்து உயிரை மாய்த்துக் கொண்ட ஐஏஎஸ் தம்பதியின் மகள்.. அட கொடுமையே - ias officer daughter ended her life by jumping from 10th floor in mumbai - Samayam Tamil

தேர்வுக்கு பயந்து உயிரை மாய்த்துக் கொண்ட ஐஏஎஸ் தம்பதியின் மகள்.. அட கொடுமையே

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 3 Jun 2024, 7:15 pm
Subscribe

தேர்வுக்கு பயந்து 10-வது மாடியில் இருந்து ஐஏஎஸ் தம்பதியரின் மகள் கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

death image
மும்பை: ஐஏஎஸ் அதிகாரிகளின் மகள் ஒருவர், தேர்வுக்கு பயந்து 10-வது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்தவர் விகார் ரஸ்தோகி. மகாராஷ்டிரா உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது தாயார் ராதிகா ரஸ்தோகியும் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவரும் அரசு உயர் பதவியில் உல்ளார். இவர்களுக்கு லிபி (27) என்ற மகள் இருக்கிறார். இவர் சட்டக்கல்லூரியில் படித்து வந்தார்.

இதனிடையே, நேற்று அவர்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடிக்கு சென்ற லிபி, அங்கிருந்து கீழே குதித்தார்.இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மருத்துதவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். சட்டப்படிப்பில் இறுதியாண்டு தேர்வுக்காக தயார் செய்து கொண்டிருந்த லிபி, தேர்வுக்கு பயந்து உயிரை மாய்த்திருக்கலாம் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
ஜே. ஜாக்சன் சிங்
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்