டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் அனல் பறக்க பேசி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.
Samayam Tamil
நேற்றைய தினம் நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து பேசினார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. நீட் தேர்வு முதல் பாஜகவின் இந்துத்துவா சித்தாந்தம் வரை முன்வைத்து ராகுல் காந்தி பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசினார். அப்போது ராகுல் காந்திக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் அவர் பதிலடி கொடுத்தார். அவர் பேசியதாவது:
மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை தேர்ந்தெடுத்த இந்திய மக்களுக்கு எனது நன்றியை கூறிக் கொள்கிறேன். பாஜக மீது இத்தனை நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் ஒற்றைக் குறிக்கோளாக உள்ளது. இந்தியாவை 2047-ம் ஆண்டுக்குள் வல்லரசாக்கவே 24x7 ஆக உழைத்து வருகிறோம். 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியா முன்னேறாது என்றுதான் நாட்டு மக்கள் நினைத்திருந்தார்கள். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு காட்சிகள் அப்படியே மாறத் தொடங்கின. ஊழலில் மலிந்து கிடந்த அரசு நிர்வாகத்தை இரும்புக் கரம் கொண்டு மீட்டுக் கொண்டு வந்தது பாஜக ஆட்சிதான். ஊழல் செய்தால் தண்டனை உண்டு என்கிற பயத்தில் அரசு இயந்திரம் சரிவர இயங்க தொடங்கியது. அதன் விளைவாக, இன்றைக்கு உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உயர்ந்திருக்கிறது. இது எல்லாம் எதிர்க்கட்சிகளின் கண்களுக்கு தெரியாது. பாவம். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமைப்பிடியின் இருந்து மீட்டு இருக்கிறோமே.. அதை உங்களால் மறுக்க முடியுமா?
கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு வரலாற்று சாதனைகளை நிகழ்த்தி காட்டி இருக்கிறது பாஜக. 2014-க்கு முன்பு தீவிரவாத தாக்குதல் என்பது அன்றாட நடவடிக்கையாக மாறிப் போய் இருந்தது. தீவிரவாதிகளை எதிர்க்கக் கூட முதுகெலும்பில்லாத காங்கிரஸ் பயந்து நடுங்கியது. ஆனால், பாஜக ஆட்சி வந்ததற்கு பிறகு தீவிரவாதிகள் தேடி தேடி வேட்டையாடப்பட்டனர். தீவிரவாதிகளின் கொட்டம் அடக்கப்பட்டது. வெடிகுண்டு சத்தத்தை கேட்டு விழிக்கும் காஷ்மீர் மக்கள், இன்றைக்கு புது விடியலை கண்டு கண் விழிக்கிறார்கள். இந்திய எல்லைகளில் ஏதோ பயிற்சி எடுப்பது போல தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தான், இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்ததால் தான், மூன்றாவது முறையாக இந்திய மக்கள் எங்களுக்கு வாக்களித்து ஆட்சி அரியணையை கொடுத்திருக்கிறார்கள். ஆனால், மூன்றாவது முறையாக கூட உங்களை (எதிர்க்கட்சிகள்) ஏற்க பாரத மக்கள் தயாராக இல்லை. இதை விட வெட்கக்கேடு என்னவவாக இருக்க முடியும்? தேர்தலில் தோற்றும் கூட எதிர்க்கட்சிகள் பிதற்றி வருவதை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது.
நாங்கள் யார் என்று மக்களுக்கு தெரியும். மக்களுக்கு நாங்கள் என்னென்ன செய்திருக்கிறோம் என்பதை பார்த்து தான், எங்களை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதனால் நீங்கள் பாடம் சொல்லி நாங்கள் கேட்கும் நிலைமையில் இல்லை. மக்களை சென்று சந்தித்து அவர்கள் கூறும் குறைகளை சரிசெய்யும் வேலைகளை பார்த்தலாவது எதிர்க்கட்சிகளுக்கு லாபம் கிடைக்கும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி பாரதத்தை நாங்கள் முன்னேற்றி வருகிறோம். உங்களால் முடிந்தால் உதவி செய்யுங்கள். தயவுசெய்து இடையூறு செய்யாதீர்கள் என நரேந்திர மோடி கூறினார்.
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க
We use cookies and other tracking technologies to provide services in line with the preferences you reveal while browsing the Website to show personalize content and targeted ads, analyze site traffic, and understand where our audience is coming from in order to improve your browsing experience on our Website. By continuing to browse this Website, you consent to the use of these cookies. If you wish to object such processing, please read the instructions described in our privacy policy/cookie policy.