![ttd decided to open affordable restaurants in tirupati for the convenience of devotees ttd decided to open affordable restaurants in tirupati for the convenience of devotees](https://tamil.samayam.com/thumb/111392944/ttd-decided-to-open-affordable-restaurants-in-tirupati-for-the-convenience-of-devotees-111392944.jpg?imgsize=111960&width=380&height=214&resizemode=75)
திருப்பதி
உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மழை வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.
திருமலையில் அன்னதானம்
புதிய கிரிமினல் சட்டத்தில் 90 - 99% காப்பி பேஸ்ட்தான்.. ப சிதம்பரம் விமர்சனம்!
சந்திரபாபு நாயுடு
இந்நிலையில் தற்போது ஆந்திர மாநிலத்தில் புதிய அரசு ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ளார். சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து திருப்பதி திருமலையில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதிரடி உத்தரவுகள்
கேரளா அக்ஷயா லாட்டரியில் ரூ, 70 லட்சத்தை அள்ளிக்குவித்த நம்பர் இதுதான்.. ஜாக்பாட் அடித்த அதிர்ஷ்டசாலி யார்?
மலிவு விலை உணவகம்
அந்த வகையில் தற்போது திருப்பதி திருமலையில் மலிவு விலையில் புதிய உணவகங்களை கொண்டு வர திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக செயல் அதிகாரி ஷியாமளா ராவ் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் அப்போது திருமலை திருப்பதி தேவஸ்தான ஹோட்டல்கள் மற்றும் ஜனதா கேண்டின்களில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அவற்றின் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் குறித்து அவர் விவாதித்தார்.
ஆலோசனை கூட்டம்
திருப்பதி பக்தர்களிடம் இனி இடைத்தரகர்கள் வேலைய காட்ட முடியாது.. தேவஸ்தானம் அதிரடி முடிவு!
பக்தர்கள் மகிழ்ச்சி
தொடர்ந்து பேசிய அவர் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சுவையான மற்றும் சுகாதாரமான உணவுகளை மலிவு விலையில் வழங்குவது நிர்வாகத்தின் முக்கிய குறிக்கோள் என்றும் தெரிவித்தார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த முடிவு ஏழுமலையான் பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.