Please enable javascript.union government appointed pradeep singh kharola as a new chief of nta: பதற வைத்த நீட் தேர்வு மோசடி.. தேசிய தேர்வு முகமை தலைவரை அதிரடியாக தூக்கிய மோடி.. இனி இவர் தான் தலைவர்

பதற வைத்த நீட் தேர்வு மோசடி.. தேசிய தேர்வு முகமை தலைவரை அதிரடியாக தூக்கிய மோடி.. இனி இவர் தான் தலைவர்

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 22 Jun 2024, 10:31 pm
Subscribe

நீட் தேர்வில் பல்வேறு மோசடிகள் நடந்த நிலையில், அதனை நடத்தம் தேசிய தேர்வு முகமையின் தலைவர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

nta new
டெல்லி: நீட் தேர்வில் நடைபெற்ற ஏராளமான முறைகேடுகளை அடுத்து, நீட் உள்ளிட்ட பல தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் (NTA) தலைவரை மாற்றி மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் நாடு முழுவதும் நடைபெற்றது. நீட் தேர்வு, ஜேஇஇ நழைத் தேர்வு உள்ளிட்ட மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் தேர்வுகள் அனைத்தையும் NTA எனப்படும் தேசிய தேர்வு முகமை தான் நடத்தி வருகிறது. இதனிடையே, நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு மோசடிகளும், முறைகேடுகளும் நடைபெற்றதாக நாடு முழுவதிலும் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, பீகாரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பீகார் தலைநகர் பாட்னாவில் தேர்வு மையம் ஒன்றில் நீட் தேர்வு எழுதிய 12 மாணவர்களுக்கு முன்கூட்டியே வினாத்தாள் கிடைத்திருந்தது தெரியவந்தது. அதேபோல, வழக்கத்துக்கு மாறாக பல மாணவர்கள் இந்த தேர்வில் முழு மதிப்பெண்ணை பெற்றிருந்தனர். அதுமட்டுமல்லாமல், ஒரே தேர்வு மையத்தில் இருந்த 15 மாணவர்களுக்கு ஒரே மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருந்தது என அடுத்தடுத்து உண்மைகள் வெளிவந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த போலீஸார் விசாரணை நடத்தியதில், பலர் கைது செய்யப்படு வருகிறார்கள். இந்நிலையில், இந்த நீட் தேர்வு மோசடிக்கு மூளையாக செயல்பட்ட ரவி அட்ரி என்பவரும் இன்று கைது செய்யப்பட்டார்.

இந்த சூழலில்தான், நீட் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் சுபோத் குமார் சிங் என்பவரை மத்திய அரசு அதிரடியாக மாற்றியுள்ளது. கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு சுபோத் குமார் சிங் மாற்றப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக பிரதீப் சிங் கரோலா என்பவரை தேசிய தேர்வு முகமையின் தலைவராக மத்திய அரச நியமித்துள்ளது. இவர் இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பின் (ITPO) தலைவராக பதவி வகிக்கும் சூழலில், இந்த பொறுப்பு அவருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
ஜே. ஜாக்சன் சிங்
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்