காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.
இத்திருக்கோயில் புதிய வீடு கட்டுதல், திருமணம், பதவி உயர்வு ஆகியவற்றிற்கு பரிகார தலமாகவும் பிரார்த்தனை தலமாகவும் விளங்குகிறது.
இங்குள்ள முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் எட்டு திருப்புகழ் பாடியுள்ளார். இங்கு கருவறையில் உள்ள முருகப்பெருமான் கம்பீரமாக 7 அடி உயரத்துடன் தனது தேவியருடன் காட்சி தருகின்றார்.
இங்கு செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் தொடர்ந்து 6 வாரங்கள் வந்து வழிபடுவோருக்கு சொந்த வீடு , திருமணம், குழந்தைப் பேறு ஆகியன கிடைப்பதால் விஷேச நாட்களில் இக்கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.
இது மட்டுமல்லாமல் புராண காலத்தில் பகீரதன் எனும் அரசன் வல்லக்கோட்டைக்கு வந்து முருகப் பெருமானை வழிபட்டு இழந்த இராஜ்ஜியத்தை பெற்றதாகவும் அதனால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இத்தலத்திற்கு வந்து வழிபடுவோருக்கு தாங்கள் இழந்த செல்வங்கள், சொந்த வீடு, உயர் பதவிகள் கிடைப்பதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். ஆனி மாத கிருத்திகை:
மேலும் இந்திரன் இத்தலத்திற்கு வந்து முருகப்பெருமானை பூசித்து இந்திராணியை மணந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் இந்த கோயிலுக்கு திருமணமாகாத ஏரளமான ஆண்களும், பெண்களும் வந்து வழிபடுகின்றனர்.
பல சிறப்புகள் பெற்ற இத்திருக்கோயிலில் ஆனி மாத கிருத்திகையினை முன்னிட்டு மூல மூர்த்திகளுக்கும் உற்சவருக்கும் பால் அபிஷேகம் நடைபெற்றது.
உற்சவர் முருகப்பெருமானுக்கு இரத்தினாங்கி அணிவிக்கப்பட்டு மலர் அலங்கார சேவையில் சஷ்டி மண்டபத்தில் பக்தர்களுக்குக் காட்சியருளினார்.
செவ்வாய்க்கிழமை மற்றும் கிருத்திகை என்பதால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வல்லக்கோட்டைக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி அரோகரா அரோகரா என்று கோஷமிட்டு முருகப்பெருமானை வழிபட்டனர். சென்னையிலிருந்து ஏராளமான பக்தர்கள் மலர் காவடிகள் சுமந்து வந்து பெருமானை வழிபட்டனர்.
திருக்கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம், மோர், குடிநீர் ஆகியன வழங்கப்பட்டன.
அன்னபூரணி: ஆங்கில இலக்கியம் மற்றும் ஊடகவியல் துறை பட்டதாரி. அரசியல், கிரைம், சினிமா, பொது செய்திகள், ஆன்மீக செய்திகளில் ஆர்வம் அதிகம். எழுதுவதிலும், புத்தகம் வாசிப்பதிலும் அலாதி பிரியம் உண்டு. ஒரு பயிற்சியாளராக சமயம் தமிழில் எனது முதல் பயணத்தை தொடங்கி, தற்போது ஒரு வருடத்திற்கும் மேலாக மாவட்ட செய்திகளை எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க
We use cookies and other tracking technologies to provide services in line with the preferences you reveal while browsing the Website to show personalize content and targeted ads, analyze site traffic, and understand where our audience is coming from in order to improve your browsing experience on our Website. By continuing to browse this Website, you consent to the use of these cookies. If you wish to object such processing, please read the instructions described in our privacy policy/cookie policy.