Please enable javascript.Tamil Nadu Police Department Action In Armstrong Murder Case ஆர்ம்ஸ்ட்ராங் மரணம் - சென்னை வரும் மாயாவதி: தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கை - ஸ்டாலின் விளக்கம்!

ஆம்ஸ்ட்ராங் மரணம் - சென்னை வரும் மாயாவதி: தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கை - ஸ்டாலின் விளக்கம்!

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 6 Jul 2024, 12:30 pm
Subscribe

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

mayawati mk stalin
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு கட்சித் தலைவர்களும் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தமிழக அரசு சென்னையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தவறிவிட்டது என குற்றச்சாட்டுகளும் எழுகிறது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். நேற்று நள்ளிரவில் இந்த வழக்கில் 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன் சரணடைந்தனர். சரணடைந்த 8 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் உடல் இன்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் அதன்பின்னர் அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக பகுஜன் சமாஜ் கட்சி அலுவலக்த்தில் வைக்கப்படும். அந்த இடத்தில் இன்று காலையில் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் சரண் - பின்னணியில் ஆற்காடு சுரேஷ் கொலை சம்பவமா?
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி இன்று சென்னை வருகிறார்.

முன்னதாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் தனது வீட்டின் அருகிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்கு உரியது. வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங், தமிழ்நாட்டில் தலித் மக்களுக்காக வலுவாக குரல் கொடுத்த தலைவர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த குற்றவாளிகளை தமிழ்நாடு அரசு தண்டிக்க வேண்டும்''

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.
சென்னை மழை: இரவு நேரத்தில் வான வேடிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் மழை?
திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மரிய  தங்கராஜ்
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்