Please enable javascript.TN Govt Schools Composite Grant: அரசு பள்ளிகளுக்கு குட் நியூஸ்... ரெடியான 50 பர்சன்ட் நிதி... லிஸ்ட் போட்ட தமிழக அரசு!

அரசு பள்ளிகளுக்கு குட் நியூஸ்... ரெடியான 50 பர்சன்ட் நிதி... லிஸ்ட் போட்ட தமிழக அரசு!

Authored byமகேஷ் பாபு | Samayam Tamil 2 Jul 2024, 6:07 am
Subscribe

பள்ளி மானியத் தொகை தொடர்பான முக்கியத் தகவலை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார். முதல்கட்ட நிதி, அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன, மாவட்டங்களுக்கு பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட விஷயங்கள் பகிரப்பட்டுள்ளன.

first phase of composite school grant for government schools in tamil nadu for 2024 25
அரசு பள்ளிகளுக்கு குட் நியூஸ்... ரெடியான 50 பர்சன்ட் நிதி... லிஸ்ட் போட்ட தமிழக அரசு!
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலையை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் பல்வேறு செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் வழிகாட்டுதலும் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2024-25ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியம் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல்கட்டமாக 50 சதவீத தொகையை அனைத்து அரசு பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளுக்கு மானியம்

அரசு பள்ளிகளுக்கு மானியம்

மாவட்ட வாரியாக நிதி விடுவிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அளிக்கப்பட்ட அறிவுரையில் அடுத்த 3 நாட்களில் பள்ளி மேலாண்மை குழுவின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த தொகையை எவ்வாறு பயன்படுத்துவது என சில வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கு டேப்லெட் வழங்கப்படவுள்ளன.

மாணவ, மாணவிகளுக்கு வசதிகள்

மாணவ, மாணவிகளுக்கு வசதிகள்

இதற்கு தேவையான சிம் கார்டு ஜூலை முதல் மார்ச் வரையிலான தொகைக்கு மட்டும் பள்ளி மானியத்தில் இருந்து வழங்கலாம். பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே கை கழுவும் வசதி, பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும். பள்ளி வளாகத்தில் சோப்பு, கிருமி நாசினி, துப்புரவு செய்ய பயன்படுத்தும் பொருட்கள் போன்றவற்றை தேவையான அளவில் இருப்பில் வைக்க வேண்டும்.

எண்ணிக்கைக்கு ஏற்ப மானியத் தொகை

எண்ணிக்கைக்கு ஏற்ப மானியத் தொகை

30 மாணவர்கள் இருந்தால் 10,000 ரூபாய் மானியத் தொகையும், இதில் 10 சதவீத தொகையை முழு சுகாதார செயல்பாடுகளுக்கு பயன்படுத்த வேண்டும். அதுவே 100 மாணவர்கள் எனில் 25,000 ரூபாயும், 250 மாணவர்கள் எனில் 50,000 ரூபாயும், 1,000 மாணவர்கள் எனில் 75,000 ரூபாயும், 1,000 மாணவர்களுக்கு மேல் ஒரு லட்ச ரூபாயும் மானியத் தொகை வழங்கப்படும். இதிலிருந்து 10 சதவீதத்தை முழு சுகாதாரத்திற்கு பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு கூட்டம்

விழிப்புணர்வு கூட்டம்

மாணவர்களுக்கு சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து ஒவ்வொரு மாதமும் ஒருமுறை விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும். அரசு பள்ளி கட்டடங்களின் கட்டமைப்பு வசதிகளான சுற்றுச்சுவர், வகுப்பறை, கழிவறை, குடிநீர் ஆகியவற்றை சமுதாய பங்களிப்புடன் பராமரிப்பது அவசியம். இதுதவிர பள்ளி மேலாண்மை குழு, பொருட்கள் வாங்குதல், மாவட்ட அலுவலர்கள் ஆகியோருக்கு தனித்தனியே வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பயன்பாட்டு சான்றிதழ்

பயன்பாட்டு சான்றிதழ்

இறுதியாக கள ஆய்வு அலுவலர்கள் பள்ளி மானியத் தொகை முறையாக செலவிடப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகு பள்ளி வாரியாக பயன்பாட்டு சான்றிதழ் பெற்று மாவட்ட அளவில் தொகுக்க வேண்டும். இவற்றை வரும் அக்டோபர் 18ஆம் தேதிக்குள் மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகள், நிதி பயன்பாடு சார்ந்த விவரங்கள் எமிஸ் இணையதளம் வழியாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகேஷ் பாபு
எழுத்தாளர் பற்றி
மகேஷ் பாபு
செய்தி தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் என 8 ஆண்டுகள் அனுபவம். எளிய மக்களின் குரலாகவும், சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் வகையிலும் எழுதப் பிடிக்கும். அரசியல் செய்திகளை வழங்குவதில் தீராத ஆர்வம் உண்டு. சமயம் தமிழ் ஊடகத்தில் Senior Digital Content Producer ஆக பணியை தொடர்ந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்