Please enable javascript.Tamil Nadu Weatherman Rain update: சென்னைக்கு இன்னொரு வரலாற்று மாதம் வெய்ட்டிங்.. தமிழ்நாடு வெதர்மேன் அசத்தல் அப்டேட்!

சென்னைக்கு இன்னொரு வரலாற்று மாதம் வெய்ட்டிங்.. தமிழ்நாடு வெதர்மேன் அசத்தல் அப்டேட்!

Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil 6 Jul 2024, 9:55 am
Subscribe

சென்னையில் நள்ளிரவை தாண்டியும் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் ஜூலை மாதத்திற்கான மொத்த மழை அளவை 2 நாட்களில் தாண்டியதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்திற்கு பிறகு மற்றொரு வரலாற்று மாதம் காத்திருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Tamilnadu weatherman

சென்னையில் கடந்து சில நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்று வீசி வருவதோடு இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் எவ்வளவு வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரங்களில் கொட்டும் இந்த மழையால் இதமான சூழல் நிலவி வருகிறது.

இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். நேற்று இரவும் இதே போல் கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று இரவு 10 மணி வாக்கில் தொடங்கிய மழை நள்ளிரவை தாண்டியும் நீடித்தது. இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் மழை நீர் காட்சியளித்தது.

ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை.. 3 முறை எச்சரித்த உளவுத்துறை.. கோட்டைவிட்ட காவல்துறை?

இன்றும் மழை தொடரும் என வானிலை அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மழை குறித்து தனது சமூகவலை பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி ஜூலை மாதத்தில் பெய்ய வேண்டிய மொத்த மழையும் இரண்டு நாட்களில் கொட்டி தீர்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காருண்யா பிளஸ் லாட்டரியில் லட்சங்களை குவித்த எண்கள் இவைதான்.. இன்று நிர்மல் லாட்டரியில் காத்திருக்கும் ஜாக்பாட்!

ஜூலை மாதத்தில் இந்த இரண்டு நாட்களில் சென்னையின் பல பகுதிகளில் நேற்று 50 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவாகியுள்ளதாகவும் சென்னையில் ஜூலை மாதத்தில் செய்ய வேண்டிய மொத்த மழை அளவு 100 மில்லி மீட்டர் என்ற நிலையில் இரண்டு நாட்களில் அந்த அளவை தாண்டி உள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது.. சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட விஜய் வலியுறுத்தல்!



ஜூன் மாதத்திற்கு பிறகு சென்னைக்கு மற்றொரு வரலாற்று மாதம் வரும் என்று தெரிகிறது எனவும் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று இரவு பரவலாக மழை வெளுத்து வாங்கியது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.
பஹன்யா ராமமூர்த்தி
எழுத்தாளர் பற்றி
பஹன்யா ராமமூர்த்தி
செய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்