Please enable javascript.boating begins in courtallam five falls : குற்றாலத்தில் படகு சவாரி துவக்கம்... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

குற்றாலத்தில் படகு சவாரி துவக்கம்... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

Authored byரம்யா. S | Samayam Tamil 6 Jul 2024, 12:04 pm
Subscribe

குற்றாலத்தில் ஐந்தருவிக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ள வெண்ணமடை குளத்தில், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்:

  • குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்
  • வெண்ணைமடை குளத்தில் படகு சவாரி துவக்கம்
  • சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
tenkasi five falls boating services
tenkasi five falls boating services
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் ஐந்தருவிக்குச் செல்லும் வழியில் சுற்றுலாத்துறையின் மூலம் படகு சவாரி துவங்கியுள்ளது. குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள வெண்ணமடை குளத்தில் இன்று முதல் படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது.
குற்றாலம்
தென்காசி மாவட்டம் என்றாலே சட்டேனே நினைவுக்கு வருவது குற்றாலம் தான். இங்கு ஏரளமான குற்றால அருவிகள் உள்ளன. இதில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். தமிழகம் மட்டுமல்லதும் அண்டை மாநிலங்களில் இருந்தும் இங்கு அதிகமான மக்கள் வருகின்றனர். குறிப்பாக சீசன் கால கட்டங்களில், கூட்டம் களை கட்டும்.

குற்றால அருவிகள்
தொடர் விடுமுறை, வார விடுமுறை போன்ற நாட்களில் குற்றாலத்தில் நீர்வரத்து இருக்கும் போது, மக்கள் இங்கு உற்சாகமாக குளித்து செல்வர். மலைகளில் உள்ள மூலிகை, அருவி நீரில் கலந்து வருவதால் உடலுக்கு நல்லது என கூறப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் பணிகள்: ராயப்பேட்டை துர்கையம்மன் கோவில்... ராஜகோபுரத்தை இடிக்க வலுக்கும் எதிர்ப்பு!

குற்றால சீசன்
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகம் இருக்கும். குற்றாலத்தில் சீசன் காலம் தற்போது நடக்கிறது. எனவே, அருவிகளில் குளிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

வெம்பக்கோட்டை அகழாய்வு: நாயக்கர் கால செம்பு காசு கண்டுபிடிப்பு!

ஐந்தருவி வெண்ணமடை குளம்
ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் சுற்றுலா துறைக்கு சொந்தமான படகு குழாமில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சீசன் காலத்தில் படகுகள் ஏற்பாடு செய்யப்படும். அதன்படி, சுற்றுலா துறையின் சார்பில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார்.

படகு சவாரி கட்டணம்
அரை மணி நேர சவாரிக்கு 2 இருக்கை படகுகளுக்கு ரூ. 150, 4 இருக்கை படகுகளுக்கு ரூ. 200, 4 இருக்கைகள் மற்றும் துடுப்பு படகுகளுக்கு ரூ. 250, ஹயாக் வகை படகுகளுக்கு ரூ. 150 என கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குற்றாலத்திற்குவருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அருவி குளியலுக்கு அடுத்ததாக, படகு சவாரி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
ரம்யா. S
எழுத்தாளர் பற்றி
ரம்யா. S
நான் ரம்யா தமிழ் இலக்கியம் கற்றுள்ளேன். ஊடகம் மீதான ஆர்வத்தால் இதழியல் துறையை தேர்ந்தெடுத்தேன். இரண்டு வருடம் பத்திரிகை துறையில் அனுபவம் உள்ளது. ஊடகம் சார்ந்த எனது பார்வையை விரிவுபடுத்தி அதில் அனுபவம் பெரும் நோக்கோடு தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் டிஜிட்டல் ஊடகத்தில் இணைந்துள்ளேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்