ஆப்நகரம்

பனியன் கம்பெனியில் திடீர் தீ விபத்து... திருப்பூர் அருகே பரபரப்பு!

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது, இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான மதிப்பிலான பனியன் துணிகள் எரிந்து சேதமானது. தீ விபத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Authored byமதுமிதா.M | Samayam Tamil 4 Jul 2024, 1:50 pm

ஹைலைட்ஸ்:

  • திருப்பூர் பின்னலாடை உற்பத்தி
  • பனியன் நிறுவனத்தில் தீ விபத்து
  • லட்சக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
  • போலீசார் தீவிர விசாரணை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil மூன்று மாடிக்கொண்ட  கட்டிடத்தில் தீ விபத்து
மூன்று மாடிக்கொண்ட கட்டிடத்தில் தீ விபத்து
பின்னலாடை உற்பத்தி
பின்னலாடை உற்பத்தியில் முதன்மை இடமாக விளங்குவது திருப்பூர், இங்கு தமிழகம் மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்தோர் என ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். வேலை தேடி திருப்பூருக்கு தினந்தோறும் ஏராளமான பணியாரர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

திருப்பூர் அனுப்பார்பாளையம்

இந்நிலையில் திருப்பூர் அனுப்பார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசர், இவர் பனியன் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார். இந்த நிறுவனம் மூன்று மாடிக்கொண்டகட்டிடத்தில் செயல்பட்டு வந்தது, மேலும் இந்த நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்,


தீ விபத்து

பனியன் துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் காலை வழக்கம் போல பணியாளர்கள் தங்களது பணிகளை தொடங்கினார்கள் அப்போது திடீரென அப்பகுதியில் தீ பரவியது அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர் அங்குள்ள தொழிலாளர்களிடம் தகவல் தெரிவித்தார்.

தீயணைப்பு துறையினருக்கு தகவல்

அப்போது அனைவரும் தீ விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர் ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. அதனால் தொழிலாளர்கள் அனைவரும் பனியன் தொழிற்சாலையை விட்டு வெளியேறினார்கள். இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பனியன் துணிகள் எரிந்து சேதம்

அந்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன் தீ மளமளவென பனியன் நிறுவனம் முழுக்க பரவியது, ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர், இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பனியன் துணிகள் எரிந்து சேதமானது.

போலீசார் விசாரணை

பிரபல தனியார் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இது மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் விசாரணையில் பின்னலாடை நிறுவனத்தில் மூன்றாயிரம் கிலோ பனியன் துணிகள் 100க்கும் மேற்பட்ட தையல் இயந்திரங்கள் ஆகியவை எரிந்து சேதமானது என தகவல் வெளியாகியிள்ளது.
எழுத்தாளர் பற்றி
மதுமிதா.M
நான் மதுமிதா கணினி அறிவியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால் கடந்த 1 ஆண்டு காலமாக பணிபுரிந்து வருகின்றேன். க்ரைம், சினிமா, தேசிய செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. தற்பொழுது டைம்ஸ் ஆப் இந்தியா சமயம் தமிழில் பணியாற்றி வருகின்றேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி