Please enable javascript.kula deiva valipadu on panguni uthiram : குலதெய்வம் எதுவென்று தெரியவில்லையா? பங்குனி உத்திரத்தன்று இந்த தெய்வத்தை வழிபடுங்க...நல்லது நடக்கும்

குலதெய்வம் எதுவென்று தெரியவில்லையா? பங்குனி உத்திரத்தன்று இந்த தெய்வத்தை வழிபடுங்க...நல்லது நடக்கும்

Authored byமோகன பிரியா | Samayam Tamil 19 Mar 2024, 4:27 pm
Subscribe

பொதுவாக ஒரு தெய்வம், விரதம் என்றால் அதற்கு இது தான் வழிபாட்டு முறை என சொல்லி விட முடியும். ஆனால் குலதெய்வ வழிபாட்டினை எப்படி செய்ய வேண்டும் என எவராலும் சரியாக கூறி விட முடியாது. காரணம் ஒவ்வொருவருடைய குலத்தின் வழிபாட்டு முறையும் வெவ்வேறு விதமாக இருக்கும். அவரவர்களின் குலத்தின் வழிபாட்டு முறை எதுவோ அந்த முறையில் குலதெய்வத்தை வழிபட்டால் மட்டுமே குலதெய்வத்தின் பரிபூரணமான அருளை பெற முடியும்.

find your kula devata temple you must visit to get rid from kula deiva dosha
குலதெய்வம் எதுவென்று தெரியவில்லையா? பங்குனி உத்திரத்தன்று இந்த தெய்வத்தை வழிபடுங்க...நல்லது நடக்கும்
குலதெய்வ வழிபாட்டிற்கு சில வழிமுறைகள் உள்ளன. குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை வழிபடுவதே சிறப்பானதாகும். அதே போல் குலதெய்வத்திற்கு வேண்டிக் கொண்டதை குலதெய்வம் கோவிலுக்கு நேரடியாக சென்று தான் வேண்டுதல் நிறைவேற்ற வேண்டும். குலதெய்வம் எது என தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்ள பங்குனி உத்திரத்தன்று எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்? அந்த தெய்வத்தை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை ஆலய அர்ச்சகர், ஜோதிடர் எம்.சிவராஜன் விளக்கமாக கூறி உள்ளார்.

​பங்குனி உத்திர வழிபாடு :

​பங்குனி உத்திர வழிபாடு :

தமிழர்களின் மிக முக்கியமான விரதங்களில், வழிபாட்டு நாட்களில் ஒன்று பங்குனி உத்திரம். பொதுவாக தமிழர்களின் விரத நாட்கள் அனைத்தும் பெளர்ணமியை சார்ந்தே அமையும். இவற்றில் பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதற்கு காரணம், தமிழ் மாதங்களில் பன்னிரெண்டாவது மாதமாக வருவது பங்குனி. அதே போல் 27 நட்சத்திரங்களில் பன்னிரெண்டாவது நட்சத்திரமாக வருவது உத்திரம். இந்த ஆண்டில் இன்னும் சிறப்பாக பங்குனி உத்திரமானது பங்குனி 12ம் தேதியன்று வருகிறது. ஆங்கில மாதங்களில் மார்ச் 25ம் தேதி பங்குனி உத்திரம் வருகிறது.

​பங்குனி உத்திர சிறப்புகள் :

​பங்குனி உத்திர சிறப்புகள் :

சந்திர பகவான், 64 கலைகளுடன் பரிபூரண நிலையில் காட்சி தரும் நாள் என்பதால் பங்குனி உத்திரம் மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகிறது. இன்றைய தினம் தெய்வ திருமணங்கள் பலவும் நடைபெற்ற நாள் என்பதால் இது மங்களகரமான நாள் என்றும் சொல்லப்படுகிறது. மிகவும் தெய்வீக தன்மை நிறைந்த பங்குனி உத்திர நாளில் குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்வது அளவில்லாத நன்மைகளை பெற்றுத் தரும். வாய்ப்பு இருக்கக் கூடியவர்கள் நேரடியாக குலதெய்வம் கோவிலுக்கு சென்று, வழிபட்டு விட்டு வரலாம். வாய்ப்பு இல்லாதவர்கள் அவரவர் இருந்த இடத்தில் இருந்தே, அவரவரின் குல வழக்கப்படி குலதெய்வத்தை வழிபட வேண்டும்.

மதுரை சித்திரை திருவிழா 2024 : ஏப்., 12ல் கொடியேற்றம், 23ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்

குலதெய்வ வழிபாடு :

குலதெய்வ வழிபாடு :

நாம் எத்தனை தெய்வங்களை வணங்கி, எப்படிப்பட்ட பூஜை செய்தாலும், அதன் பலன் நமக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் குலதெய்வத்தின் அருள் நமக்கு இருக்க வேண்டும். குல தெய்வத்தின் அருள் இல்லை என்றால், வேறு எந்த தெய்வத்தை சென்று வணங்கினாலும் அதற்கான பலன் கிடைக்காது. அதோடு குலதெய்வத்தை வணங்க தவறினால் குலதெய்வ குற்றம் ஏற்படும். இந்த குலதெய்வ குற்றம் ஏற்பட்டால் பல விதமான நோய்களால் பாதிக்கப்படுவது, எடுத்த காரியங்கள் அனைத்திலும் தோல்வி, தொழில் நஷ்டம், கடன் சுமை, அலுவலகத்தில் பணி சுமை, நிம்மதி இல்லாத நிலை ஆகியவை ஏற்படும். இதனால் குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வம் கோவிலுக்கு சென்று, வழிபட்டு விட்டு வர வேண்டும்.

​குலதெய்வம் யாரென்று தெரியவில்லையா?

​குலதெய்வம் யாரென்று தெரியவில்லையா?

குலதெய்வம் தெரிந்தவர்கள் வீட்டில் இருந்தே, பங்குனி உத்திரத்தன்று வழிபட்டு கொள்ளலாம். குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் போது அங்கிருந்து திருநீறு, குங்குமம் ஆகியவற்றை எடுத்து வந்து, தினமும் நெற்றியில் இட்டுக் கொண்டால் நமக்கு எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆனால் சிலருக்கு அவர்களின் குலதெய்வம் யார் என்றே தெரியாமல் இருக்கும். பல தலைமுறைகளாக குலதெய்வம் யார் என்று தெரியாமல், தேடி பார்த்தும் குலதெய்வத்தை தெரிந்து கொள்ள முடியாததால், குலதெய்வத்தை வணங்காமல் இருப்பார்கள். இவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள குல தெய்வத்தை வழிபடாத தோஷத்தில் இருந்து விடுபட எளிமையான வழிபாடு ஒன்றை செய்யலாம்.

கழுத்தை நெரிக்கும் அளவிற்கு பிரச்சனையா? இந்த மந்திரங்களை தினமும் சொல்லுங்க

​பங்குனி உத்திரத்தன்று இந்த கோவிலுக்கு போங்க :

​பங்குனி உத்திரத்தன்று இந்த கோவிலுக்கு போங்க :

குலதெய்வம் எது என தெரியாதவர்கள் பங்குனி உத்திரத்தன்று, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்று வழிபடலாம். அப்படி வழிபடுவதால் சொரிமுத்து அய்யனார், உங்களின் குலதெய்வத்திடம் சொல்லி, உங்களுக்கு ஏற்பட்டுள்ள குலதெய்வ தோஷத்தை நீக்குவார். அது மட்டுமல்ல தொடர்ந்து சொரிமுத்து அய்யனாரை வணங்கி வந்தால் உங்களின் குலதெய்வம் எது என்பதை உங்களின் கனவிலோ அல்லது யாராவது ஒரு நபர் மூலமாகவோ சொரிமுத்து அய்யனார் காண்பித்துக் கொடுப்பார். இது இன்றும் பலரது வாழ்வில் நடந்து வரும் அற்புதமாகும். ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வதை இன்றும் காண முடியும்.

- ஆன்மிக தகவல்கள்,
எம்.சிவராஜன்,
ஆலய அர்ச்சகர், ஜோதிடர்,
சிதம்பரம்.
மொபைல் எண் - +91 86754 41071

மோகன பிரியா
எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்