Ttd Released March 2024 Month Events Details In Tirumala
மார்ச் மாதம் திருப்பதி போறீங்களா? இந்த 5 நாட்களை குறிச்சு வச்சுக்கோங்க
உலகின் பணக்கார கடவுள் என அனைவராலும் போற்றப்படும் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆண்டு முழுவதும் அதிக அளவிலான பக்தர்கள் வந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக உள்ளது. திருப்பதியில் ஒவ்வொரு மாதமும் எந்தெந்த தேதிகளில் என்னென்ன உற்சவம் நடைபெற உள்ளது என்பது குறித்த விபரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம், பக்தர்களின் வசதிக்காக முன்பே வெளியிடுவது வழக்கம். அது போல தற்போது மார்ச் மாதம் திருமலையில் நடக்க உள்ள உற்சவங்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
Authored byமோகன பிரியா | Samayam Tamil28 Feb 2024, 10:36 pm
பிப்ரவரி மாதம் நிறைவடைந்து மார்ச் மாதம் துவங்க உள்ளது. இந்நிலையில் மார்ச் மாதம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்க உள்ள முக்கிய விழாக்கள், உற்சவங்கள் குறித்த விபரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. மார்ச் மாதம் என்பது சிவன் கோவில்களில் மட்டுமல்ல திருப்பதியிலும் மிக முக்கியமான மாதமாகும். மார்ச் மாதத்தில் திருமலை திருப்பதியில் நடக்கும் உற்சவங்கள் மிகவும் விசேஷமானதாகும். திருமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மார்ச் மாத உற்சவ விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil
திருப்பதி மார்ச் 2024 மாத உற்சவங்கள் :
மார்ச் 06, 20 - சர்வ ஏகாதசி மார்ச் 08 - மகா சிவராத்திரி மார்ச் 20 - 24 - வருடாந்திர தெப்போற்சவம் மார்ச் 25 - தும்புரு தீர்த்த முக்கோட்டி, ஸ்ரீ லட்சுமி ஜெயந்தி
திருமலையில் நடக்கும் மிக முக்கியமான விழாவான தெப்ப உற்சவம். ஆண்டுதோறும் பங்குனி மாத பெளர்ணமி அன்று இந்த தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். சுவாமி புஷ்கரிணியில் ஐந்து நாட்கள் விழாவாக இவ்விழா நடைபெறும். தெப்ப உற்சவத்தின் முதல் நாளில் ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் புஷ்கரிணியில் அமைக்கப்பட்டுள்ள தெப்பத்தில் வலம் வருவார்கள். இரண்டாம் நாளில் ஸ்ரீ கிருஷ்ணர், ருக்மணி தேவியும் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் செய்வார். திரியோதசி துவங்கி, பெளர்ணமி வரையிலான மீதமுள்ள 3 நாட்களும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி தெப்ப உற்சவம் காண்பார்.
தெப்ப உற்சவத்தின் முதல் இரண்டு நாட்களில் மூன்று முறையும், மூன்றாவது நாள் முதல் ஐந்து முறையும், கடைசி நாளில் 7 முறையும் உற்சவ மூர்த்திகள் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருவார்கள். இந்த நாளில் பெளர்ணமி நிலவின் அழகுடன் தெப்ப உற்சவ அழகையும் காரண ஏராளாமான பக்தர்கள் திருமலைக்கு வருவது வழக்கம். தற்போது திருப்பதியில் ஒரு நாளைக்கு சராசரியாக 62,000 முதல் 77,000 வரையிலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த வருகின்றனர். வார நாட்களில் 70,000 க்கும் குறைவான பக்தர்களும், வார இறுதி நாட்களில் 77,000 வரையிலான பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பிப்ரவரி 25ம் தேதி 76,577 பேரும், பிப்ரவரி 26ம் தேதி 70,077 பேரும் சுவாமி தரிசனம் செய்துள்ள நிலையில் பிப்ரவரி 27ம் தேதி 63,421 பேர் மட்டுமே சுவாமி தரிசனம் செய்துள்ளனர். சர்வ தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சராசரியாக 8 முதல் 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பிப்ரவரி 25ம் தேதியான ஞாயிற்றுக்கிழமையன்று மட்டும் ரூ.5.09 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க
We use cookies and other tracking technologies to provide services in line with the preferences you reveal while browsing the Website to show personalize content and targeted ads, analyze site traffic, and understand where our audience is coming from in order to improve your browsing experience on our Website. By continuing to browse this Website, you consent to the use of these cookies. If you wish to object such processing, please read the instructions described in our privacy policy/cookie policy.