பாகிஸ்தானைப் பிரித்து மதச்சார்பற்ற ஆட்சியை நிறுவியவர், இந்தியாவுக்குத் துரோகம் இழைத்தவர் என அறியப்படுபவர்: ஜின்னா மறைந்த தினம் இன்று
முகமது அலி ஜின்னா, என்ற பெயரைக் கேட்டாலே ஏதோ எதிரியைப் போல ஒரு உணர்வே பெரும்பாலான இந்தியர்களுக்குத் தோன்றுகிறது. பாகிஸ்தானைத் தனியாகப் பிரித்து அதனுடன் காஷ்மீரையும் இணைக்க முயன்ற தேசத் துரோகி என்றே இவர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றது. சுதந்திரப் போராட்ட தியாகி, பாகிஸ்தான் எனும் தனி நாடு கோரியது, பிரித்தது ஏன்..? பாகிஸ்தானைப் பிரித்து மதச்சார்பற்ற அறிவித்ததன் பின்னணியில் என்ன அரசியல்..? முஸ்லீம் என அறியப்பட்டபோதும் பன்றிக் கறி உண்று, எந்தவித மதச் சடங்குகளைப் பின்பற்றாத ஜின்னா எதற்காக இந்து-முஸ்லீம் பிரிவினைவாதியாகப் பார்க்கப் படுகிறார் போன்ற கேள்விகளுக்கு, அவர் மறைந்த தினமான இன்று விடையளிக்கும் வகையில் இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது.
முகமது அலி ஜின்னா லண்டன் சென்று சட்டப் படிப்பு படித்தவர். படிப்பை முடித்துவிட்டு 1986 ல், நாடு திரும்பிய ஜின்னா வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்குகிறார். கை நிறையக் காசு. ஆரம்பத்திலிருந்தே ஆங்கிலேயர்களைப் போலக் கோட்டுச் சூட்டு அணிந்து கொண்டுதான் எல்லா இடங்களுக்கும் செல்வார். எனினும், ஜின்னாவால் நாட்டில் மதத்தின் பெயரால் மனிதன் ஒடுக்கப்படுவதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை.குவைத் இ அசாம் என்றழைக்கப்படும் ஜின்னா 1876ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி கராச்சியில் பிறந்தார். அடிப்படையில் அவர் குஜராத் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர். அப்போது நாட்டில் ஆங்கிலேயர்களின் அட்டகாசம் தாங்க முடியாமல், பணம் ஈட்டுவதுக்காக முகமது அலி ஜின்னாவின் பெற்றோர் கராச்சிக்குக் குடி பெயர்ந்திருந்தனர். ஜின்னாவின் குடும்பம் பண வசதி பெற்றிருந்தது. 6 வயது முதல் ஜின்னா வீட்டிலே பாடம் படிக்கும் வகையில் ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
Samayam Tamil
ஜின்னா ஆங்கிலத்தை கற்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். உள்நாட்டில் பள்ளிப் படிப்பை முடித்த்ச் ஜின்னா லண்டன் சென்று சட்டம் படிக்க முடிவு செய்தார். ஜின்னாவின் அம்மா மித்திபாய் ஜின்னா, தனது மகன் இங்கிலாந்து சென்று ஆங்கில பெண்ணை திருமணம் செய்துவிடுவானோ என்ற பயம் கொண்டிருந்தார். இதனால், தங்கள் உறவுக்கார பெண்ணான எமிபாயை ஜின்னாவுக்கு 1892 ல் திருமணம் செய்து வைத்தார். அப்போது ஜின்னாவுக்கு 16 வயதே நிரம்பி இருந்தது. எமிபாய் வயது 14 மட்டுமே. லண்டன் சென்றார் ஜின்னா, படிப்பை முடித்துவிட்டு ஜின்னா ஊர் திரும்பியபோது தாயும், மனைவியும் உயிரிழந்து விட்டனர். தொடர்ந்து வழக்கறிஞர் தொழிலில் நாட்டம் செலுத்தி வந்த ஜின்னா, சுதந்திரப் போராட்டம் பக்கம் தனது முழு கவனத்தையும் செலுத்தினார். இடையில், தனது நண்பர் தீன்ஷா பெடிட்டின் மகள் ரத்னா பாய்யை காதலித்தார். அப்போது, ஜின்னாவின் வயது 40, ரத்னா பாய்க்கு ௧௪ மட்டுமே ஆனது. வீட்டில் கடுமையான எதிர்ப்பு இருந்தபோதும், ஜின்னாவின் வழிகாட்டுதல் படி ரத்னா பாய் தனது 18 வது வயதில் வீட்டை விட்டு வெளியே வந்து ஜின்னாவை திருமணம் செய்துக் கொண்டார். இருவரும் சில காலங்களே சேர்ந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு தீனா வாட்யா என்ற பெண் குழந்தையும் இருந்தது. தனித்து வாழ்ந்து வந்த ரத்னா பாய், தனது 29 வது வயதில் கேன்சர் பாதிப்பால் உயிரிழந்தார்.
அப்போதைய காங்கிரஸ் இயக்கத்தின் மீது மரியாதை கொண்டிருந்தார் ஜின்னா. கோபாலா கிருஷ்ண கோகுலே தலைவராக இருந்தபோது, காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார். தொடர்ந்து போராட்டக் களங்களில் ஜின்னா பங்கும் இருந்தது. அதே சமயம் முஸ்லீம்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பதில் தனி பங்கு வகித்தார். ஜின்னா அடிப்படையில் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்திருந்தபோதும், மத ரீதியான நம்பிக்கைகளை ஏற்கவில்லை. உதாரணமாகப் பன்றிக் கறிகூட உண்ணுவார். பொதுநல சிந்தனையுடன் சக மனிதர்களின் உரிமைக்காக எதையும் செய்பவர். ஜின்னா சொன்னபடி நடப்பார் என்ற பெயர் அவர் இறக்கும் வரை அவருடனே இருந்தது. நாடு சுதந்திரமடையும்போது பாகிஸ்தான் என்ற நாடு உருவாகி இருக்க வேண்டும் என உறுதியாக இருந்தார். அந்த சமயத்தில், அதாவது 1940 ல் இந்த கோரிக்கையை முன்னெடுத்த ஜின்னாவை, பெரியார் சந்தித்து திராவிட நாட்டையும் தனியாகப் பிரிக்க வேண்டும் எனக் கூறி ஆலோசனை நடத்தினார். ஜின்னா அடிப்படையில் காங்கிரஸ் வாதியாகவே இருக்க ஆசைப்பட்டார். ஒரு கட்டத்தில் முஸ்லீம் கட்சியை மதச் சார்பில்லாமல் நடத்த வேண்டும் என்பதுக்காகவே அதன் தலைவர் பொறுப்பேற்றார். ஜின்னா, முஸ்லீம் லீக் கட்சியின் தலைமை பொறுப்பேற்றபோதும், தொடர்ந்து காங்கிரஸ் எடுத்த போராட்டங்களுக்கு ஆதரவு மட்டும் தெரிவிக்காமல், தனது பங்கையும் அளித்து வந்தார்.
இதற்கிடையில், தென் ஆப்ரிக்காவிலிருந்து காந்தி இந்தியா திரும்புகிறார். மரியாதையுடன் பார்க்கப்பட்ட காந்தி 1915களில் காங்கிரசில் இணைந்து முக்கிய தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். காந்தி காங்கிரஸ் இயக்கத்துக்குள் வந்து சில ஆண்டுகள் முதலே, ஜின்னாவுக்கு காந்திக்கும் இடையே சிந்தானந்த ரீதியாக விரிசல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காந்தியின் சில நடவடிக்கைகளால், அரசியலில் மதம் சார்ந்த போராட்டங்களை முன் நிறுத்த வேண்டாம் எனக் கூறுகிறார்.
ஆங்கிலேயர்கள் நாட்டில் தேர்தல் நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள். ஜின்னா அப்போதும் முஸ்லீம்களுக்கு 33 % இட ஒதுக்கீடு வேண்டும் என்ற வாதத்தையே முன் வைக்கிறார். காங்கிரஸ் 27 % என வாதத்தை ஏற்பதாகக் கூறுகிறது. ஜின்னா ஒத்துக் கொள்ளவில்லை.
1940 ல் முஸ்லீம் லீக் கட்சியின் மாநாடு நடந்தது. அதில் மதச்சார்பற்ற நாடாகப் பஞ்சாப், காஷ்மீர், மேற்கு வங்காளம் இப்போதிருக்கும் பாகிஸ்தான் ஆகிய பகுதிகளைப் பிரித்து பாகிஸ்தான் என்ற நாடு பிரிக்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து 1941ஆம் ஆண்டு மதப் பாகுபாட்டால் முஸ்லீம்கள் நாட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து மக்கள் அறியும் வகையில் பத்திரிக்கை ஒன்றைத் தொடங்கி நடத்துகிறார். தொடர்ந்து தனி நாடு கோரிக்கை வலுப்பெற்றது. ஆங்கிலேயர்களால் 1946 ம் ஆண்டு சுதந்திரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அனைத்து கட்சிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்ததது. அதிலிருந்து முஸ்லீம் லீக் வெளியேறியது. டெரெக்ட் ஆக்ஷ்ன் டே என்ற அறிவிப்பை முஸ்லீம் லீக் வெளியிடுகிறது. நாடு முழுவதிலும் வாழும் முஸ்லீம்கள் போராட்டத்தில் குதிக்கின்றனர். இந்த போராட்டத்தின்போது கொல்கத்தாவில் கலவரம் வெடித்தது. இந்து-முஸ்லீம் கலவரமாக மாற்றப்படுகிறது. மிக மோசமான கலவரம், 10 ஆயிரத்துக்கு அதிகமானவர்களின் உயிர்களைப் பிரித்துச் சென்றது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். என இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதிலும் கலவரம் வெடிக்கிறது. காந்தியும், ஜின்னாவும் கூட்டாக 1947, ஏப்ரல் 13 ம் தேதி அனைவரும் அமைதி காக்கும்படி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்கள். பாகிஸ்தான் எனும் தனி நாடு உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்தது.
நாட்டில் இப்போதுள்ள இந்தியாவிலிருந்து சுமார் ஒன்றரை கோடி மக்கள் சொத்துக்களையும் உடைமைகளையும் அப்படியே விட்டுவிட்டு பாகிஸ்தான் சென்றனர். 1947, ஆகஸ்ட் 14 இரவு பாகிஸ்தான் சுதந்திர காற்றைச் சுவாசிக்கிறது. ஜின்னா முதல் பிரதமராகப் பதவி ஏற்கிறார். பதவி ஏற்ற ஜின்னா, எந்த காரணத்திலும் மதச்சார்பற்ற கொள்கையிலிருந்து பாகிஸ்தான் பின் வாங்காது என்பது போன்ற அறிவிப்பை வெளியிடுகிறார். இந்து, சீக்கியர் என அனைவரும் இங்குச் சமம்தான் எனப் பேசினார். ராணுவம் எந்த சூழலிலும் அதிகாரத்தைக் கைப்பற்றக் கூடாது என்ற சட்ட வரையறையைச் செயல்படுத்தினார். ஜின்னா இப்போதிருக்கும் பாகிஸ்தானைப் பற்றி துளியும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். பிரதமரான ஜின்னா 1948, செப். 11ஆம் தேதி உயிரிழந்தார்
We use cookies and other tracking technologies to provide services in line with the preferences you reveal while browsing the Website to show personalize content and targeted ads, analyze site traffic, and understand where our audience is coming from in order to improve your browsing experience on our Website. By continuing to browse this Website, you consent to the use of these cookies. If you wish to object such processing, please read the instructions described in our privacy policy/cookie policy.