Please enable javascript.ரஷித் கான்,SA vs AFG: ‘படுதோல்விக்கு காரணம்’.. எங்கள் மீது தவறு இல்லை: இதனால்தான், தோற்றோம்.. ரஷித் கான் ஓபன் டாக்! - t20 world cup 2024 semifinalsa vs afg conditions didnt allow us to do what we wanted says rashid khan - Samayam Tamil

SA vs AFG: ‘படுதோல்விக்கு காரணம்’.. எங்கள் மீது தவறு இல்லை: இதனால்தான், தோற்றோம்.. ரஷித் கான் ஓபன் டாக்!

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 27 Jun 2024, 8:46 am
Subscribe

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று தோல்வியை சந்தித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி
டி20 உலகக் கோப்பை 2024 தொடரின், முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தப் பிறகு, ரஷித் கான் பேட்டிகொடுத்தார்.

10 பேர் ஒற்றை இலக்கம்:
தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், மொத்தம் 10 ஆப்கானிஸ்தான் வீரர்கள், ஒற்றை இலக்க ரன்களைதான் எடுத்தார்கள். அஜ்மதுல்லா மட்டுமே 10 (12) இரட்டை இலக்க ரன்னை தொட்டார்.

முக்கிய வீரர்கள் சொதப்பல்:
ஆப்கானிஸ்தான் அணியில், குர்பஸ் 0 (3), இப்ராஹிம் ஜோர்டன் 2 (5), குல்பதீன் 9 (8), நபி 0 (3), ரஷித் கான் 8 (8) ஆகிய முக்கிய வீரர்கள் படுமோசமாக சொதப்பினார்கள்.

56 ரன்களுக்கு அவுட்:
ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் இப்படி அடுத்தடுத்து சொதப்பியதால், ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவர்கள் முடிவில் 56/10 ரன்களை மட்டும் சேர்த்து, ஆல்-அவுட் ஆனது.

வரலாற்று தோல்வி:
டி20 உலகக் கோப்பை அரையிறுதி வரலாற்றில், ஒரு அணி 100 ரன்களுக்கும் குறைவாக அடித்திருப்பது இதுதான் முதல்முறை.

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு:
தென்னாப்பிரிக்க அணியில் சாம்ஷி 1.5 ஓவர்களில் 6 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்களை எடுத்தார். மார்கோ யான்சனும் 3/16 சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். ரபாடா 2/14, நோர்க்கியா 2/7 ஆகியோரும் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்கள்.

தென்னாப்பிரிக்க இன்னிங்ஸ்:
இலக்கை துரத்திக் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில், டி காக் 5 (8) மட்டுமே அவுட் ஆனார். ரீசா ஹென்ட்ரிக்ஸ் 29 (25), கேப்டன் எய்டன் மார்க்கரம் 23 (21) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதால், தென்னாப்பிரிக்க அணி 8.5 ஓவர்கள் முடிவில், 60/1 ரன்களை எடுத்து, பைனலுக்கு முன்னேறியது.

இரண்டாவது அரையிறுதியில், இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன. இதில் வெற்றியைப் பெறும் அணி, பைனலில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, சனிக்கிழமை விளையாடும்.

ரஷித் கான் பேட்டி:
இப்போட்டியில், தோல்வியை சந்தித்தப் பிறகு பேசிய ரஷித் கான், ‘‘காலநிலையை கண்டு அஞ்சக் கூடாது. எப்போதும்போல விளையாட வேண்டும் என நான் சக வீரர்களிடம் அடிக்கடி கூறினேன். உண்மையில், நாங்கள் எதிர்பார்த்ததைவிட, காலநிலைக்கு ஏற்றுக்கொண்டு எங்களால் விளையாட முடியவில்லை. எங்களது அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டனர். இதனால்தான், அரையிறுதி வரை முன்னேற முடிந்தது. அரையிறுதி வரை முன்னேறியது மகிழ்ச்சிதான். தென்னாப்பிரிக்க போன்ற பலமிக்க அணியிடம்தான் தோற்றோம். இதனை ஏற்றுக்கொள்கிறோம்’’ எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், ‘‘இது தொடக்கம்தான். இனிமேல், எங்களது அணியின் மீதான பார்வை மாறும். நாங்களும் பலமிக்க அணிதான் என்பதை நிரூபித்துள்ளோம். நல்ல அனுபவங்கள் கிடைத்தன. அழுத்தங்கள் நிறைந்த ஆட்டங்களில், எப்படி ஆட வேண்டும் என்ற பாடத்தை, நாங்கள் நிறையவே கற்றுக்கொண்டோம்’’ எனக் கூறினார்
மதுரை சமயன்
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்