ஜி.வி. பிரகாஷ்
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் திருமணமாகி 11 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள். தாங்கள் இருவரும் கலந்து பேசி இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவித்தார்கள். 12 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் 11 ஆண்டுகளாக கணவன், மனைவியாக வாழ்ந்த பிறகு பிரிந்துவிட்டார்களே என ரசிகர்கள் வேதனைப்படுகிறார்கள். இந்நிலையில் ரசிகர்கள் புது விஷயம் பற்றி பேசுகிறார்கள்.
மயக்கம் என்ன
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ரிச்சா கங்கோபத்யாய நடிப்பில் வெளியான படம் மயக்கம் என்ன. அந்த படம் பார்த்தவர்கள் ரிச்சா போன்ற ஒரு மனைவி கிடைக்க மாட்டாரா என ஏங்கியது உண்டு. மயக்கம் என்ன படத்தில் வந்த பிறை தேடும் இரவிலே பாடலை சைந்தவியும், ஜி.வி. பிரகாஷ் குமாரும் சேர்ந்து பாடினார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த அந்த பாடலை எழுதியவர் உங்கள் தனுஷ்.
சர்ச்சைகள்
விவாகரத்துகள்
பிறை தேடும் இரவியே பாடலை எழுதி நடித்த தனுஷ், அதை பாடிய ஜி.வி. பிரகாஷ், சைந்தவி ஆகியோர் விவாகரத்து பெற்றுவிட்டார்கள். மேலும் அந்த பாடல் வந்த படமான மயக்கம் என்ன படத்தை இயக்கிய செல்வராகவனின் முதல் திருமணமும் விவாகரத்தில் முடிந்துவிட்டது. இது தான் நாங்கள் கண்டுபிடித்த விஷயம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.
கவலை
செல்வராகவனும், சோனியா அகர்வாலும் விவாகரத்து செய்துவிட்டார்கள். சோனியாவை பிரிந்த செல்வராகவன் கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். காதலித்து திருமணம் செய்து கொண்ட தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷும், சைந்தவியும் பிரிவை அறிவித்துவிட்டார்கள். இது என்ன கொடுமை, இப்படி விவாகரத்துகள் தொடர்கிறதே என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
காதல்
8ம் வகுப்பு படித்தபோது 10ம் வகுப்பு படித்த ஜி.வி. பிரகாஷ் குமார் மீது சைந்தவிக்கு காதல் ஏற்பட்டிருக்கிறது. ஜி.வி. பிரகாஷுடன் கண்களாலேயே காதல் பேசியிருக்கிறார் சைந்தவி. அவரும், ஜி.வி. பிரகாஷும் ஆசையாக காதலித்தது பற்றி பேசிய வீடியோக்களை ஷேர் செய்து, இந்த உலகில் உண்மை காதல் என்பதே இல்லையா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.