Please enable javascript.Thuglife update:மணிரத்னம் திரைவாழ்க்கையில் இதுவே முதல்முறை..ஷாக்கான கோலிவுட்..தக்லைப் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!

Thuglife Update: மணிரத்னம் திரைவாழ்க்கையில் இதுவே முதல்முறை..ஷாக்கான கோலிவுட்..தக்லைப் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!

Authored byS வினோத்குமார் | Samayam Tamil 6 Jul 2024, 12:28 pm
Subscribe

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிக்கவிருக்கும் தக்லைப் திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

ஹைலைட்ஸ்:

  • மணிரத்னம் - தக்லைப் காம்போ
  • சிம்பு நடிக்கும் தக்லைப்
  • வெளியான லேட்டஸ்ட் அப்டேட்
  • எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சிம்பு கமல் காம்போ
கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் காம்போ நாயகன் படத்திற்கு பிறகு 36 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்திருக்கிறது. நாயகன் என்ற மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு இவர்கள் தக்லைப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. கடந்தாண்டு கமலின் பிறந்தநாளை முன்னிட்டு தக்லைப் படத்தின் அறிவிப்பு வெளியானது.

அதுவரை கமல் மற்றும் மணிரத்னம் இணையப்போவதாக எந்த தகவலும் கசியாத நிலையில் திடீரென வந்த தக்லைப் அறிவிப்பால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகினார்கள். அதன் பிறகு இப்படத்தில் கமலுடன் இணைந்து துல்கர் சல்மான், ஜெயம் ரவி, த்ரிஷா என பலர் நடிப்பதாக வந்த அறிவிப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியது. ஆனால் திடீரென இப்படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகுவதாக அறிவிக்கப்பட்டது.


கூலி ரஜினி படம் தான் ஆனால் நீங்க கமல் வெறியன்னு மறந்துடாதீங்க லோகேஷ்

இருவரும் விலகியதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை. ஆனால் இருவரும் கால்ஷீட் பிரச்சனை காரணமாகத்தான் தக்லைப் படத்திலிருந்து விலகியதாக சொல்லப்பட்டது. அதன் பிறகு சிம்பு தக்லைப் படத்தில் நடிக்க கமிட்டானார். படப்பிடிப்பு தளத்தில் இருந்து சிம்பு மற்றும் கமலின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் படு வைரலான நிலையில் சிம்பு தக்லைப் படத்தில் நடிப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

தற்போது தக்லைப் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பொதுவாக மணிரத்னம் ஒரு படத்தின் படப்பிடிப்பை குறுகிய காலகட்டத்திற்குள் முடிக்கக்கூடியவர். எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும், எவ்வளவு பெரிய ஸ்டார் காஸ்ட்டாக இருந்தாலும் ஐம்பது நாட்களுக்குள் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிடுவார் மணிரத்னம்.


இந்திய திரையுலகிலேயே அதிக பொருட்ச்செலவில் மிகப்பிரம்மாண்டமாக தயாரான பொன்னியின் செல்வன் படத்தின் இரு பாகங்களையுமே குறுகிய காலகட்டத்திற்குள் முடித்துவிட்டார் மணிரத்னம். ஆனால் தக்லைப் படத்தின் படப்பிடிப்பு நூறு நாட்களை கடந்து போகுமாம். இதன் மூலம் மணிரத்னம் திரைவாழ்க்கையில் அவர் அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்திய படமாக தக்லைப் அமைந்திருக்கின்றது.


அதற்கு காரணம் தக்லைப் படத்தின் படப்பிடிப்பு பல இடங்களில் நடந்து வருகின்றது. செர்பியா, டெல்லி என பல இடங்களில் தக்லைப் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. மேலும் கதையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதால் தான் இப்படத்தின் படப்பிடிப்பு அதிக நாட்கள் செல்வதாக பேசப்பட்டு வருகின்றது.


இந்நிலையில் படத்தில் கமல் என்னதான் ஹீரோவாக இருந்தாலும் சிம்புவுக்கும் சரி சமமான ரோல் கொடுக்கப்பட்டுள்ளதாம். துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி வெளியேறிய பிறகு படத்தின் கதையை மணிரத்னம் மாற்றியுள்ளாராம். மேலும் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி கதாபாத்திரங்களை நீக்கிவிட்டு புதிதாக சிம்புவிற்காக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார் மணிரத்னம்.




எனவே சிம்புவிற்கு கமலுக்கு இணையான ரோல் தக்லைப் திரைப்படத்தில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் தக்லைப் திரைப்படத்தின் படப்பிடிப்பு நினைத்ததை விட வேகமாக நடைபெற்று வருவதால் கண்டிப்பாக இந்தாண்டே இப்படம் ரிலீசாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவது குறிப்பிடத்தக்கது.
S  வினோத்குமார்
எழுத்தாளர் பற்றி
S வினோத்குமார்
வினோத் குமார். நான் பொறியியல் மற்றும் ஊடகவியல் பட்டப்படிப்பை படித்துள்ளேன்.கடந்த நான்கு ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகினறேன். சினிமா மீது அதீத ஆர்வம் கொண்ட நான் தற்போது times internet சமயம் தமிழில் சினிமா தொடர்பான விஷயங்களை எழுதும் sub editor ஆக பணியாற்றி வருகின்றேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்