கரூர்
Appearance
கரூர் (ஆங்கிலம்:karur) இந்தியாவின் தமிழகத்திலுள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.
கரூர் | |||||||
— நகரம் — | |||||||
அமைவிடம் | 10°57′29″N 78°04′43″E / 10.958°N 78.0786°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ் நாடு | ||||||
மாவட்டம் | கரூர் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் | ||||||
நகராட்சித் தலைவர் | ப. சிவகாம சுந்தரி | ||||||
மக்களவைத் தொகுதி | கரூர் | ||||||
மக்களவை உறுப்பினர் | |||||||
சட்டமன்றத் தொகுதி | கரூர் | ||||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
76,336 (2001[update]) • 12,808/km2 (33,173/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 5.96 சதுர கிலோமீட்டர்கள் (2.30 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.municipality.tn.gov.in/karur/ |
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கரூரில் 76,336 மக்கள் வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் ஆண்கள் 38,375 ,பெண்கள் 37,961 ஆவார்கள். கரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 85.48% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75.98% விட கூடியதே. கரூர் மக்கள் தொகையில் 11.22% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
வரலாறு
கரூர் பண்டைய காலங்களில் முக்கியமான வணிகத்தலமாக விளங்கியது. அகழ்வாராய்ச்சியின் போது ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன் கரூரைக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.
வெளி இணைப்புகள்