Please enable javascript.பழைய ஓய்வூதியத் திட்டம்,பழைய பென்சன் திட்டம் ”பரிசீலனையில் உள்ளது”.. இன்னும் எத்தனை காலம் தான்..? விரக்தியில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள்! - cps abolition movement not satisfied with tamil nadu finance minister thangam thennarasu comment on old pension scheme - Samayam Tamil

பழைய பென்சன் திட்டம் ”பரிசீலனையில் உள்ளது”.. இன்னும் எத்தனை காலம் தான்..? விரக்தியில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள்!

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 27 Jun 2024, 9:20 am
Subscribe

பழைய பென்சன் திட்ட விவகாரத்தில் தமிழக நிதியமைச்சரின் ”பரிசீலனை” கருத்துக்கு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

old pension scheme
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அரசிடம் அறிக்கை சமர்பித்துள்ளது. இக்குழுவின் அறிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஜூன் 26) சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.

அரசின் பரிசீலனையில் உள்ளது என்பதற்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி சட்டமன்றத்தில் அளித்த விளக்கம் என்ன தெரியுமா?

”பரிசீலனையில் உள்ளது என்றால் பரிசீலனையின் முடிவில் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் அல்லது பரிசீலனையின் முடிவில் உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற இயலாது என்று தெரிவிக்கப்படும்” என கலைஞர் கூறினார்.

2021ஆம் ஆண்டு திமுக அரசு பதவியேற்றது முதல் 2021, 2022, 2023, 2024ஆம் ஆண்டு என 4 ஆண்டுகளாக நடைபெற்ற நிதித் துறை மானியக் கோரிக்கையில் வல்லுநர் குழு அறிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் இதேபோல, பரிசீலனையில் உள்ளது - பரிசீலனையில் உள்ளது என்று கூறிக் கொண்டே இருப்பார்கள் என்று சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டம்.. நிதியமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!

வரையறுக்கப்பட்ட பயன் தரும் ஓய்வூதியத் திட்டத்தை தொடர பல்வேறு அரசு பணியாளர்கள், சங்கங்களின் கோரிக்கையைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து பொருத்தமான முடிவை மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரைக்க ஏதுவாக கடந்த 2016ஆம் ஆண்டில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கையானது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு இன்னும் "பரிசீலனையில்" உள்ளது.

தேர்தலுக்கு முன்பாக வாக்கு சேகரிப்பதற்காக பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவோம், பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் போன்ற வாக்குறுதிகளைக் கொடுத்து வாக்குகளையும் பெற்று, ஆட்சிக்கும் வந்துவிட்டு, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பழைய பென்சன் திட்ட விவகாரத்தில் விரைந்து “பரிசீலனை” செய்து ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்று சிபிஎஸ் ஒழிப்பு அமைப்பினரும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
செந்தில் குமார்
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்