நாளை (ஜூன் 22ஆம் தேதி) நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சிலின் 53ஆவது கூட்டத்தில் முதன்முறையாக ஆதார் அட்டை தொடர்பான புதிய விதி அமல்க்கு வரவிருக்கிறது. புதிய பதிவுகளுக்கு ஆதார் பயோமெட்ரிக் கட்டாயமாக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை நாடு முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி பதிவுக்கு ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரம் என்ற புதிய விதியை கொண்டு வர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்தப் புதிய விதி நாடு முழுவதும் அமல்படுத்தப்படவிருக்கிறது. குஜராத், புதுச்சேரி மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்கள் ஏற்கனவே இந்த முன்மொழிவை செயல்படுத்தியுள்ளன.
ஜிஎஸ்டி பதிவுக்கு என்னென்ன ஆவணங்கள் தேவை? >> CIN எண்/ நிறுவன ஒருங்கிணைப்புச் சான்றிதழ்.
>> பான் கார்டு. >> மெமோராண்டம் மற்றும் ஆர்டிகல் ஆஃப் அசோசியேஷன் அல்லது பார்ட்னர்ஷிப் பத்திரம் அல்லது LLP பத்திரம்.
>> உரிமை ஒப்பந்தம், வாடகை அல்லது குத்தகை ஒப்பந்தம் போன்ற முகவரி ஆதாரம்.
>> நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவரின் பெயர், முகவரி, ஆதார் மற்றும் பான் கார்டு.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஆதார் அங்கீகாரத்தின் கீழ் உங்கள் வணிக இருப்பிடத்தின் நேரடி சரிபார்ப்பு இருக்காது. இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் நேரடி சரிபார்ப்பு அவசியம். நீங்கள் ஆதாரை வழங்கவில்லை என்றால் நேரடி சரிபார்ப்பு விருப்பத்தையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
ஆன்லைன் அங்கீகார விருப்பத்தை நீங்கள் தேர்வுசெய்தால் படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு ஆன்லைன் செயல்முறையை முடிக்கக்கூடிய இணைப்பு உங்களுக்கு அனுப்பப்படும். இந்த விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டதும் Submit பட்டனைக் கிளிக் செய்வதன் மூலம் அதை ஜிஎஸ்டி போர்ட்டலுக்கு அனுப்ப வேண்டும். இதற்குப் பிறகு, ஜிஎஸ்டி போர்ட்டலில் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்படும்.
சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்தால், ARN எண் உருவாக்கப்படும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவருக்குப் படிவம் GST REG 02 மூலம் ஒப்புதல் அனுப்புவதன் மூலம் தெரிவிக்கப்படும். இதற்குப் பிறகு விண்ணப்பம் ஜிஎஸ்டி அதிகாரிக்கு அனுப்பப்படும். எல்லாம் சரியாக இருந்தால் அடுத்த 7 நாட்களுக்குள் ஜிஎஸ்டி பதிவுச் சான்றிதழ் மற்றும் ஜிஎஸ்டிஐஎன் வழங்கப்படும்.
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க
We use cookies and other tracking technologies to provide services in line with the preferences you reveal while browsing the Website to show personalize content and targeted ads, analyze site traffic, and understand where our audience is coming from in order to improve your browsing experience on our Website. By continuing to browse this Website, you consent to the use of these cookies. If you wish to object such processing, please read the instructions described in our privacy policy/cookie policy.