Please enable javascript.Bomb Threat To Chennai Airport And YMCA Building : சென்னையில் பரபரப்பு : 3 இடங்களில் குண்டு வெடிக்கும் - மெயிலில் வந்த மிரட்டலால் அதிர்ச்சி!

சென்னையில் பரபரப்பு : 3 இடங்களில் குண்டு வெடிக்கும் - மெயிலில் வந்த மிரட்டலால் அதிர்ச்சி!

Authored byஎழிலரசன்.டி | Samayam Tamil 2 Jun 2024, 9:49 am
Subscribe

சென்னையில் மூன்று இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bomb Threat To Chennai
அண்மைக் காலமாக போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இ.மெயில் கடிதம் மூலமாக மிரட்டல் வருவதும், வெடிகுண்டு நிபுணர்கள் நடத்தும் சோதனையில் அது புரளி என தெரியவருவதும் தொடர்ந்து வருகிறது.

கடந்த வாரம் டெல்லியில் உள்ள மத்திய உள் துறை அமைச்சகம் அமைந்துள்ள பகுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தீவிர சோதனை நடத்திய நிலையில், அவ்வாறாக வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை, மிரட்டல் போலி என தெரியவந்தது. இதுபோலவே பள்ளிகளுக்கும் மிரட்டல்கள் சென்றன.

காவிரி டெல்டா விவசாயிகள் கவனத்திற்கு : மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு எப்போது? - வெளியான முக்கிய தகவல்!

நேற்று கூட சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மும்பை விமான கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளார். பயணிகளை இறக்கிவிட்டு நடத்திய சோதனையில், விமானத்தின் கழிவறையில் 30 நிமிடங்களில் குண்டு வெடிக்கும் என ஒரு பேப்பரில் எழுதி இருந்தது கைப்பற்றப்பட்டது. எனினும், சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. அதே சமயம் அடுத்தடுத்து முக்கிய இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் என்பது வந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் மூன்று இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த இ மெயில் கடிதத்தில், நந்தனம் ஒய்எம்சிஏ வளாகம், பூக்கடை பகுதியில் உள்ள ஒய்எம்சிஏ கட்டடம், சென்னை விமான நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

வெடிகுண்டு மிரட்டல் புரளி - போலீஸ் விசாரணை

இதனையடுத்து, ஒய்எம்சிஏ மற்றும் விமான நிலையப் பகுதிகளுக்கு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது. விமான நிலையத்தில் பயணிகளின் லக்கேஜ் உள்ளிட்டவற்றை தீவிர சோதனை செய்து அனுப்பினர். தீவிர சோதனை முடிவில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

அதிமுகவை முந்தும் பாஜக கூட்டணி : டைம்ஸ் நவ் வெளியிட்ட எக்சிட் போல் - அதிர்ச்சியில் ர.ரக்கள்..

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார், மெயில் எங்கிருந்து வந்தது உள்ளிட்டவை குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். விபிஎன் பயன்படுத்தி இதுபோன்ற மிரட்டல்கள் விடுக்கப்படுவதால், குற்றவாளிகளை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. விரைவில் குற்றவாளிகளை பிடிப்போம் என காவல் துறையினர் உறுதியோடு கூறுகிறார்கள். அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எழிலரசன்.டி
எழுத்தாளர் பற்றி
எழிலரசன்.டி
நான் எழிலரசன். கடந்த 8 ஆண்டுகளாக டிஜிட்டல் ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சமூகம் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளேன். தற்போது சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer - ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்