Imd Issues Very Heavy Rainfall And Red Alert To Assam Due To Southwest Monsoon
வெளுத்துவாங்கும் கனமழை.. தத்தளிக்கும் அசாம்.. 46 பேர் பலி.. 16 லட்சம் பேர் பாதிப்பு.. இந்த மாநிலங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை!
அசாம் மாநிலத்தில் பலத்த மழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்றும் கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை வடமாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. அசாம் மாநிலத்தில் கொட்டும் மழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil
நேற்றைய நிலவரப்படி 29 மாவட்டங்களில் உள்ள 2800 கிராமங்களில் மொத்தம் 16.25 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அசாமில் உள்ள நாகோன் மற்றும் தர்ராங் மற்றும் பராக் பள்ளத்தாக்கில் உள்ள கரீம்கஞ்ச் ஆகிய மாவட்டங்கள் தொடர் அதி கனமழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
கொட்டித் தீர்க்கும் பலத்த மழையால் காசிரங்கா பூங்கா 80 சதவீத அளவுக்கு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகளின் வெள்ளப்பெருக்கு காரணமாக 28 மாவட்டங்களில் 11 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் (F&ES), ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
வட மாநிலங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு அதி மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அசாம், மேகாலயா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோக்ரஜார், சிராங், பக்சா, பர்பேட்டா, போங்கைகான், நல்பாரி, உடல்குரி, பிஸ்வநாத், லக்கிம்பூர் மற்றும் தேமாஜி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், என்றும் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மேற்கு வங்கம், பீகார், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் மணிப்பூரில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் ஐந்து நாட்களுக்கு கன மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் 40 கிலோமீட்டர் வேகத்திற்கு பலத்த காற்று வீசும் என்றும் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
செய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்.... மேலும் படிக்க
We use cookies and other tracking technologies to provide services in line with the preferences you reveal while browsing the Website to show personalize content and targeted ads, analyze site traffic, and understand where our audience is coming from in order to improve your browsing experience on our Website. By continuing to browse this Website, you consent to the use of these cookies. If you wish to object such processing, please read the instructions described in our privacy policy/cookie policy.