Please enable javascript.அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கு... திமுகவைச் சேர்ந்தவர் கைது; முக்கிய புள்ளிக்கு தொடர்பு உள்ளதா விசாரணை? - 8 members of dmk arrested in the case of murder of aiadmk leader shanmugam - Samayam Tamil

அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கு... திமுகவைச் சேர்ந்தவர் கைது; முக்கிய புள்ளிக்கு தொடர்பு உள்ளதா விசாரணை?

Authored byமதுமிதா.M | Samayam Tamil 4 Jul 2024, 2:28 pm
Subscribe

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கில் 5 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில் திமுகவைச் சேர்ந்த சதிஷ் உட்பட எட்டு பேர் கைது.

ஹைலைட்ஸ்:

  • சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி
  • அதிமுக பிரமுகர் சண்முகம்
  • சண்முகம் கொலை வழக்கில் தனிப்படை போலீசார் விசாரணை
  • திமுகவை சேர்ந்த சதிஷ் உட்பட எட்டு பேர் கைது
சண்முகம் கொலை வழக்கில் திமுகவைச் சேர்ந்த சதீஷ் உட்பட எட்டு பேர் கைது
சண்முகம் கொலை வழக்கில் திமுகவைச் சேர்ந்த சதீஷ் உட்பட எட்டு பேர் கைது
சேலம் மாநகராட்சி
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் இவர் அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து வருகின்றார். மேலும் 4 ஆண்டுகளாக சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவராகவும் பதவி வகித்து வந்தார், அதிமுக பிரமுகர் சண்முகம் அதிமுகவில் நடக்கக்கூடிய அனைத்து கட்சி நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு வந்த நிலையில் மக்களிடமும் அதிமுக பொதுச் செயலாளர் வரை நற்பெயரை பெற்றவராக விளங்கினார்.

அதிமுக பிரமுகர் சண்முகம்

இதனால் திமுகவைச் சேர்ந்தவருக்கு முன்விரோதம் இருந்துள்ளது, இந்நிலையில் அதிமுக பிரமுகர் சண்முகம் தனது பணிகளை முடித்துவிட்டு தாதகாப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார், செல்லும் வழியிலேயே மர்ம நபர்கள் அவருடைய இருசக்கர வாகனத்தை வழி மறைத்த நிலையில் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.


சேலம் அரசு மருத்துவமனை

சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் வந்த நிலையில் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். சம்பவ இடத்தில் அதிமுக தொண்டர்கள் மற்றும் சண்முகத்தின் குடும்பத்தினர் என அனைவரும் ஒன்று சேர்ந்து நான்கு மணி நேரமாக உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த போலீசார் சண்முக உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

தனி படை போலீசார் விசாரணை

இந்நிலையில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் 5 தனி படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

திமுகவைச் சேர்ந்த சதீஷ் உட்பட எட்டு பேர் கைது

சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவிக்கு ஆய்வு செய்ய ஆய்வு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்விசாரணையில் சண்முகம் கொலை வழக்கில் திமுகவைச் சேர்ந்த சதீஷ் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணையை தொடங்கியுள்ளனர். திமுகவினர் கைது செய்யப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.
மதுமிதா.M
எழுத்தாளர் பற்றி
மதுமிதா.M
நான் மதுமிதா கணினி அறிவியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால் கடந்த 1 ஆண்டு காலமாக பணிபுரிந்து வருகின்றேன். க்ரைம், சினிமா, தேசிய செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. தற்பொழுது டைம்ஸ் ஆப் இந்தியா சமயம் தமிழில் பணியாற்றி வருகின்றேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்