Please enable javascript.bsp tamil nadu chief armstrong dalit activities : ஆம்ஸ்ட்ராங் கொலை: தலித் அரசியலில் மிகப்பெரிய இழப்பு - நினைவுகளை பகிர்ந்த செ.கு தமிழரசன்!

ஆம்ஸ்ட்ராங் கொலை: தலித் அரசியலில் மிகப்பெரிய இழப்பு - நினைவுகளை பகிர்ந்த செ.கு தமிழரசன்!

Authored byரம்யா. S | Samayam Tamil 6 Jul 2024, 2:24 pm
Subscribe

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நிலையில், அவருடனான பழக்கம் குறித்து இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு தமிழரசன் பகிர்ந்துள்ள கருத்துக்களை இங்கு காணலாம்.

ஹைலைட்ஸ்:

  • பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்
  • ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை
  • மிகப்பெரிய இழப்பு - செ.கு தமிழரசன்
BSP tamil nadu chief armstrong death
BSP tamil nadu chief armstrong death
ஆம்ஸ்ட்ராங் படுகொலை
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று, அவரது வீட்டருகே 6 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, த.வெ.க தலைவர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டத்தை பதிவு செய்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்
இந்த கொலையில் குற்றவாளிகள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட குற்றவாளிகளை 10 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சென்னைக்கு ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாளை வருகிறார். இந்த படுகொலையை கண்டித்து, ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டு இருந்த சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு அக்கட்சி தொண்டர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செ.கு தமிழரசன்
இந்த படுகொலைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களையும், வருத்தத்தையும் தெரிவித்து வரும் நிலையில், இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு தமிழரசன், ஆம்ஸ்ட்ராங் பற்றி சில தகவல்களை சமயம் தமிழுக்கு பகிர்ந்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் பேரதிர்ச்சியை அளிக்கிறது - முதல்வர் ஸ்டாலின்!

அவர் கூறியதாவது: எங்கள் இருவருக்கும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பழக்கம் உள்ளது. டாக்டர் அம்பேதகரின் கொள்கைகளில் உறுதியான நிலைபாடு உள்ளவர். தமிழகத்தில் தலித் இளைஞர்களுக்கு உதவுவது, பௌத்த மத ஈடுபாடுகளில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய தேர்தலில்கள் போட்டியிட்டு, அக்கட்சியின் தலைவர் மாயாவதியின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். அவரை படுகொலை செய்தவர்கள் மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையான தண்டனை வழங்கி, இந்த கொலைக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிவு - வானதி சீனிவாசன் கண்டனம்!

தலித் அரசியலில் தனித்த பங்களிப்பை வழங்கி உள்ளார். பல பொது நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்தியுள்ளார். தலித் இலக்கியம், தலித் வரலாறு போன்ற புத்தங்களை தொடர்ந்து படித்துக் கொண்டே இருப்பார்.

அவரின் இறப்பு ஒடுக்கப்பட்ட மக்களின் கொள்கை நடைமுறைகளுக்கு, இயக்க செயல்பாடுகளுக்கும் மிகப்பெரிய இழப்பு. குறுகிய வயதில், இப்படிப்பட்ட கொடூரமான மரணம் அவருக்கு நிகழ்ந்து இருக்க கூடாது எனக் கூறினார்.
ரம்யா. S
எழுத்தாளர் பற்றி
ரம்யா. S
நான் ரம்யா தமிழ் இலக்கியம் கற்றுள்ளேன். ஊடகம் மீதான ஆர்வத்தால் இதழியல் துறையை தேர்ந்தெடுத்தேன். இரண்டு வருடம் பத்திரிகை துறையில் அனுபவம் உள்ளது. ஊடகம் சார்ந்த எனது பார்வையை விரிவுபடுத்தி அதில் அனுபவம் பெரும் நோக்கோடு தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் டிஜிட்டல் ஊடகத்தில் இணைந்துள்ளேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்