Please enable javascript.conductors got prize to promote digital transaction in chennai : பேருந்து நடத்துனர்களுக்கு பரிசு வழங்க ஏற்பாடு-அரசு போக்குவரத்து கழகம் அதிரடி!

பேருந்து நடத்துனர்களுக்கு பரிசு வழங்க ஏற்பாடு-அரசு போக்குவரத்து கழகம் அதிரடி!

Authored byசு. கணபதி சுப்பிரமணியன் | Samayam Tamil 4 Jul 2024, 1:44 pm
Subscribe

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக பேருந்து நடத்துனர்களுக்கு பரிசு வழங்க ஏற்பாடு செய்ய அரசு போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஹைலைட்ஸ்:

  • டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க நடவடிக்கை
  • பேருந்து நடத்துனர்களுக்கு பரிசு வழங்க ஏற்பாடு
  • அரசு போக்குவரத்து கழகம் அதிரடி!
bus
SETC bus Upi
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு புதிய திட்டங்கள்
இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு வெளிமாநிலங்களுக்கும் பேருந்துகளானது இயக்கப்படுகிறது. இவ்வாறு இருக்கும் நிலையில் பல்வேறு புதிய திட்டங்களை போக்குவரத்து கழகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் பேருந்தில் அதிகளவில் பயணம் செய்த நபர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பரிசுகள் வழங்கப்பட்டது.

மக்களுக்கு உதவி
தமிழகத்தில் டிஜிட்டல் பரிவத்தனையானது அதிகரித்து வருகிறது. எங்கு சென்றாலும் மொபைல் இருந்தால் போதும் பணம் செலுத்தி கொள்ளும் வசதி மக்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. இவ்வாறு இருக்கும் நிலையில் அண்டை மாநிலமான பெங்களூருவில் பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்தனைகள் நடைபெற்று வந்தது. இதேபோல் சென்னையிலும் வராதா என்ற கேள்வி எழுந்தது.


டிஜிட்டல் பரிவர்த்தனைகள்
இந்நிலையில் சென்னையில் பல்வேறு பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக ஜிபே , யூபிஐ மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இது மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதிய அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

எஸ் இ டி சி பேருந்துகள்

அதில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் நடத்துநர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.
எஸ் இ டி சி பேருந்துகளில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் மின்னணு பண பரிவர்தனை மூலம் பயணிகளுக்கு அதிக பயணச்சீட்டு வழங்கும் நடத்துனர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

நடத்துனர்கள் மகிழ்ச்சி
இதனால் பேருந்து நடத்துனர்கள் அனைவரும் தற்போது இந்த அறிவிப்பால மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் பேருந்து நடத்துனர்கள் அதிகளவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை செய்ய பயணிகளை நிச்சயம் ஊக்குவிப்பார்கள். இதன் மூலம் சில்லறை பிரச்சனைகளும் இனி வராது என்று மக்களும் இதற்கு வரவேற்பு அளித்து வருகின்றனர்.
சு. கணபதி சுப்பிரமணியன்
எழுத்தாளர் பற்றி
சு. கணபதி சுப்பிரமணியன்
நான் கணபதி சுப்பிரமணியன். ஊடகத்துறையில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். தேசிய, சர்வதேச, சினிமா செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. இப்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்