Please enable javascript.o panneerselvam condemns dmk government for tamilnadu bsp chief armstrong murder: ஆம்ஸ்ட்ராங் கொடூர கொலை.. இது என்ன தலைநகரா அல்லது கொலை நகரா.. சீறிப்பாய்ந்த ஓ. பன்னீர்செல்வம்

ஆம்ஸ்ட்ராங் கொடூர கொலை.. இது என்ன தலைநகரா அல்லது கொலை நகரா.. சீறிப்பாய்ந்த ஓ. பன்னீர்செல்வம்

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 6 Jul 2024, 4:03 pm
Subscribe

சென்னை மாமன்றத்திற்கு சுயேச்சையாக போட்டியிட்டு தேர்வான ஒருவர், ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் ஒருவரையே நடுரோட்டில் ரவுடிகள் வெட்டிக் கொலை செய்கிறார்கள் என்றால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லை என்றுதான் அர்த்தம் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.

MixCollage-06-Jul-2024-04-02-PM-1678
சென்னை: சென்னையில் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை முன்வைத்து திமுக அரசை முன்னாள் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒருகாலத்தில் காவல்துறையினரை பார்த்து ரவுடிகள் அஞ்சி ஓடினர். ஆனால், இப்போது தமிழகமே ரவுடிகள் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது. சட்டவிரோத, சமூக விரோத செயல்களுக்கு திமுக ஆட்சி துணைப் போவதே இதற்கு முக்கிய காரணம். கடந்த மூன்றாண்டு கால திமுக ஆட்சி என்பது சமூக விரோதிகளின் ஆட்சி என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த வகையில், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு அவரது வீட்டின் முன்பே கொலை செய்யப்பட்டிருக்கிறார். இது பேதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை.. போலீஸுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.. சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி

இந்த கொலைவெறி தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இறைவனை பிராத்திக்கிறேன். சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராக சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரு மக்கள் பிரதிநிதியை, ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் வெட்டி சாய்க்கும் தணிச்சல் ரவுடிகளுக்கு வந்துவிட்டது என்றால், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு துளி கூட இல்லை என்றுதான் அர்த்தம். சென்னை தலைநகர் கொலை நகராக மாறி வருகிறது.

ஒவ்வொரு முறையும் கொலைகள் நடைபெறும் போது, தனிப்படை அமைப்பதும், ஒருசிலரை பிடித்து கைது செய்வதும் வாடிக்கையாகி விட்டது. சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை திமுக அரசு இதுவரை எடுத்ததாக தெரியவில்லை.

16 ஆண்டுகளுக்கு முன்பு அதிர்ந்த சட்டக்கல்லூரி.. இன்று கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்.. மிரண்ட போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி உரிய தண்டனையை பெற்று தர வேண்டும் என அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். ஆட்சியினால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஆராய்ந்து அதற்கேற்ப செயல்படுபவர்தான் அரசர் என்பதுதான் வள்ளுவனின் வாக்கு. ஆனால், கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சி என்பது தீமைகள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சியாக இருக்கிறது. எதையுமே இந்த அரசு ஆராயவில்லை என்பது தெளிவாகிறது என ஓபிஎஸ் கூறியுள்ளார்.
ஜே. ஜாக்சன் சிங்
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்