Please enable javascript.L.Murugan about Sengol Issue: செங்கோலை அவமதிக்கும் இந்தியா கூட்டணி... வெளுத்து வாங்கிய எல்.முருகன்!

செங்கோலை அவமதிக்கும் இந்தியா கூட்டணி... வெளுத்து வாங்கிய எல்.முருகன்!

Authored byமகேஷ் பாபு | Samayam Tamil 27 Jun 2024, 9:14 pm
Subscribe

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் செங்கோல் விவகாரம் மீண்டும் சர்ச்சையாகி இருக்கிறது. சமாஜ்வாதி கட்சி எழுதிய கடிதம் தான் இதற்கான அச்சாரமாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் செங்கோல் விவகாரத்தில் பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியிருக்கிறார்.

L Murugan
18வது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பிக்கள் நடப்பு கூட்டத்தொடரில் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. அதில் ஓம் பிர்லா இரண்டாவது முறையாக தேர்வானார். இன்றைய தினம் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இந்த சூழலில் மக்களவையில் இடம்பெற்றுள்ள செங்கோலை அகற்ற வேண்டும்.

சமாஜ்வாதி கட்சி கடிதம்

அந்த இடத்தில் அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தை வைக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு சமாஜ்வாதி கட்சி எம்.பி ஆர்.கே.சவுத்ரி எழுதிய கடிதம் அனலை கிளப்பியது. இதற்கு பாஜக தரப்பில் இருந்து கடும் எதிர்வினைகள் வந்த வண்ணம் உள்ளன. செங்கோல் என்பது மன்னராட்சியின் அடையாளம். இந்தியா மற்றும் தமிழக கலாச்சாரத்தை சமாஜ்வாதி அவமதித்து விட்டது என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழ் கலாச்சாரத்தையே வெறுக்குறாங்க.. இந்தியா கூட்டணி மீது யோகி ஆதித்யநாத் காட்டம் - இதுதான் விஷயம்..
பாஜகவினர் குற்றச்சாட்டு

மேலும் வரலாற்று சின்னங்களை மோசமாக சித்தரிப்பதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எப்போதும் முன்னிலையில் இருக்கின்றன என விமர்சனம் செய்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இருந்தும் பாஜக தலைவர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செங்கோலை பற்றிய பெருமை, செங்கோலை பற்றி அறியாதவர்கள் தான் இப்படி பேசுவார்கள்.

செங்கோலின் சிறப்புகள்

அவரது பேச்சிற்கு என்னுடைய கண்டத்தை தெரிவித்து கொள்கிறேன். செங்கோல் தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தை போற்றுகிறது. தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தை பறைசாற்றுகிறது. இந்த ஆட்சி நேர்மையாக நடக்கிறது. நீதிநிலை தவறாமல் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் சோழர்கள் பயன்படுத்தியது தான் இந்த செங்கோல்.
எமர்ஜென்சி பற்றி பேசறீங்களே... இதெல்லாம் ஞாபகம் இருக்கா? - திருச்சி சிவா விமர்சனம்!
சோழர்களின் பெருமை

இந்தியாவில் மட்டுமல்ல தெற்காசியாவிலும் சிறப்பான ஆட்சியை வழங்கியவர்கள் சோழர்கள். பல்வேறு நாடுகளில் நம்முடைய பண்பாட்டை, கலாச்சாரத்தை விரிவுபடுத்தி ஆட்சி செய்தவர்கள். அப்படிப்பட்ட சோழர்கள் ஆட்சியில் செங்கோல் சிறப்பான இடத்தை பிடித்தது. அதன்பிறகு ஆதீனங்கள் செங்கோலை பயன்படுத்தி வருகின்றனர். 1947ஆம் ஆண்டு இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது மவுண்ட் பேட்டன் பிரபு கேள்வி எழுப்பினார்.

இந்தியா கூட்டணி மீது விமர்சனம்

ஆட்சி மாற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்றார். அப்போது ராஜாஜி அவர்கள் தான் சோழர்களின் பெருமையை சொல்லி செங்கோல் சரியாக இருக்கும் என்று குறிப்பிட்டார். அப்படிப்பட்ட பெருமைக்குரிய செங்கோலை எடுத்து கொண்டு போய் அகமதாபாத் அருங்காட்சியகத்தில் இந்தியா கூட்டணியினர் வைத்து விட்டனர். ஆனால் நம்முடைய பிரதமர் மோடி செங்கோலை தேடி கண்டுபிடித்து புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கொண்டு வந்து வைத்தார்.

இப்படிப்பட்ட செங்கோலை அவமதித்த சமாஜ்வாதி எம்.பிக்கு கடும் கண்டனங்கள். இதற்கு துணை போகும் இந்தியா கூட்டணியினரும் தமிழர்களை அவமதிக்கிறார்கள். தமிழ் கலாச்சாரத்தை அவமதிக்கிறார்கள் என்று எல்.முருகன் தெரிவித்தார்.
மகேஷ் பாபு
எழுத்தாளர் பற்றி
மகேஷ் பாபு
செய்தி தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் என 8 ஆண்டுகள் அனுபவம். எளிய மக்களின் குரலாகவும், சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் வகையிலும் எழுதப் பிடிக்கும். அரசியல் செய்திகளை வழங்குவதில் தீராத ஆர்வம் உண்டு. சமயம் தமிழ் ஊடகத்தில் Senior Digital Content Producer ஆக பணியை தொடர்ந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்