தென்காசி: தென்காசியில் வளர்ப்பு நாய் கடித்ததை கவனிக்காமல் விட்டதால் அதன் உரிமையாளர் நாய் போல மாறி குரைத்து குரைத்து இறந்து போன பரிதாப சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகம் முழுவதுமே அண்மைக்காலமாக நாய்கள் கடித்து குதறும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இரு மாதங்களுக்கு முன்பு கூட சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வீலர் நாய்கள் கடித்து குதறியதில் அந்த சிறுமியின் மண்டை ஓடே கிழிந்து தொங்கியது. அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். இதேபோல, ஏராளமானோர் தமிழகம் முழுவதும் நாய்க்கடிக்கு ஆளாகி படுகாயம் அடைந்தோ அல்லது மரணத்தையோ தழுவி வருகின்றனர்.
அந்த வகையில், தென்காசியில் நடைபெற்ற ஒரு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருப்பதோடு, நாய்க்கடி தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் முத்தையா. 50 வயதான இவர், சலவைத் தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் இருந்தனர்.
இதனிடையே, கடந்த சில வருடங்களுக்கு முன்பு நாய்க் குட்டி ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து, தனது பிள்ளையை போல வளர்த்து வந்தார். அந்த நாயும் இவர் மீது உயிராக இருந்துள்ளது. முத்தையாவை விட்டு ஒரு நாள் கூட பிரியாமல் இருந்து வந்தது. இந்த சூழலில், இரு மாதங்களுக்கு முன்பு அந்த நாய் வெளியே சென்றுள்ளது.
அப்போது தெருவில் சுற்றித்திரிந்த வெறி நாய், முத்தையா வீட்டு நாயை கடித்திருக்கிறது. இதனால் சில நாட்களில் அவரது நாய்க்கும் வெறி பிடித்திருக்கிறது. இதனால் நாயை சங்கிலியில் கட்டிப் போட்டு முத்தையா வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த வாரம் முத்தையா, வேலையை முடித்து வீடு திரும்பும் போது, சங்கிலியை அறுத்துக் கொண்டு வந்த நாய், அவர் மீது பாய்ந்து முகத்தையும், வாயையும் கடித்து குதறியது.
நாய் கடித்தால் உடனடியாக ஊசி போட வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாமல், வீட்டு நாய் தானே என்ற அலட்சியத்தில் காயங்களுக்கு சோப்பு மட்டுமே போட்டுவிட்டு தனது வழக்கமான வேலைகளை பார்க்க தொடங்கினார். ஆனால், இரண்டே நாட்களில் அவருக்கு குமட்டலும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது. அதையும் ஏதேனும் ஒவ்வாமை என நினைத்து அவரது குடும்பத்தினர் விட்டுவிட்டனர்.
ஆனால், அதற்கு அடுத்தடுத்த நாட்களில் தண்ணீரை பார்த்து பயந்து தொடங்கிய முத்தையா, நாய் போல குரைக்கவும் ஆரம்பித்தார். இதை பார்த்து பயந்து போன அவரது குடும்பத்தினர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மயங்கி விழுந்த முத்தையாவை பரிசோதித்த மருத்துவர்கள், நாயக் கடியால் ஏற்படும் ரேபிஸ் வைரஸ் தாக்கி அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். நாய்க் கடியை அலட்சியப்படுத்தியதால் ஒரு உயிரே போய்விட்ட சம்பவம் தென்காசியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதுமே அண்மைக்காலமாக நாய்கள் கடித்து குதறும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இரு மாதங்களுக்கு முன்பு கூட சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வீலர் நாய்கள் கடித்து குதறியதில் அந்த சிறுமியின் மண்டை ஓடே கிழிந்து தொங்கியது. அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். இதேபோல, ஏராளமானோர் தமிழகம் முழுவதும் நாய்க்கடிக்கு ஆளாகி படுகாயம் அடைந்தோ அல்லது மரணத்தையோ தழுவி வருகின்றனர்.
அந்த வகையில், தென்காசியில் நடைபெற்ற ஒரு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருப்பதோடு, நாய்க்கடி தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் முத்தையா. 50 வயதான இவர், சலவைத் தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் இருந்தனர்.
இதனிடையே, கடந்த சில வருடங்களுக்கு முன்பு நாய்க் குட்டி ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து, தனது பிள்ளையை போல வளர்த்து வந்தார். அந்த நாயும் இவர் மீது உயிராக இருந்துள்ளது. முத்தையாவை விட்டு ஒரு நாள் கூட பிரியாமல் இருந்து வந்தது. இந்த சூழலில், இரு மாதங்களுக்கு முன்பு அந்த நாய் வெளியே சென்றுள்ளது.
அப்போது தெருவில் சுற்றித்திரிந்த வெறி நாய், முத்தையா வீட்டு நாயை கடித்திருக்கிறது. இதனால் சில நாட்களில் அவரது நாய்க்கும் வெறி பிடித்திருக்கிறது. இதனால் நாயை சங்கிலியில் கட்டிப் போட்டு முத்தையா வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த வாரம் முத்தையா, வேலையை முடித்து வீடு திரும்பும் போது, சங்கிலியை அறுத்துக் கொண்டு வந்த நாய், அவர் மீது பாய்ந்து முகத்தையும், வாயையும் கடித்து குதறியது.
நாய் கடித்தால் உடனடியாக ஊசி போட வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாமல், வீட்டு நாய் தானே என்ற அலட்சியத்தில் காயங்களுக்கு சோப்பு மட்டுமே போட்டுவிட்டு தனது வழக்கமான வேலைகளை பார்க்க தொடங்கினார். ஆனால், இரண்டே நாட்களில் அவருக்கு குமட்டலும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது. அதையும் ஏதேனும் ஒவ்வாமை என நினைத்து அவரது குடும்பத்தினர் விட்டுவிட்டனர்.
ஆனால், அதற்கு அடுத்தடுத்த நாட்களில் தண்ணீரை பார்த்து பயந்து தொடங்கிய முத்தையா, நாய் போல குரைக்கவும் ஆரம்பித்தார். இதை பார்த்து பயந்து போன அவரது குடும்பத்தினர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மயங்கி விழுந்த முத்தையாவை பரிசோதித்த மருத்துவர்கள், நாயக் கடியால் ஏற்படும் ரேபிஸ் வைரஸ் தாக்கி அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். நாய்க் கடியை அலட்சியப்படுத்தியதால் ஒரு உயிரே போய்விட்ட சம்பவம் தென்காசியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.