Please enable javascript.Migrant Workers Tiruppur,திருப்பூர் படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்! - migrant workers arrive tiruppur after lok sabha election results - Samayam Tamil

திருப்பூர் படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்!

Authored byரம்யா. S | Samayam Tamil 9 Jun 2024, 12:34 pm
Subscribe

மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், வட மாநில தொழிலாளர்கள் மீண்டும் திருப்பூர் படையெடுத்துள்ளனர்.

ஹைலைட்ஸ்:

  • மக்களவைத் தேர்தல் நிறைவு
  • வட மாநில தொழிலாளர்கள்
  • மீண்டும் திருப்பூர் வருகை
வடமாநில தொழிலாளர்கள்
வடமாநில தொழிலாளர்கள் (Representational Image)
இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டது.
வடமாநில தொழிலாளர்கள்
திருப்பூர் மாவட்டத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் பின்லாடை நிறுவனங்களில்
பணி புரிகின்றனர்.

தேர்தல்
ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் முதற்கட்டமாக வாக்கு பதிவு முடிவடைந்தது. ஆனால் பீகார், ஒடிசா, மேற்குவங்கம், பாட்னா உள்ளிட்ட மாநிலங்களில் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடந்தது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

வாக்குப் பதிவு
வடமாநில தொழிலாளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
ஆனால் வாக்களித்த பின்னரும், தேர்தல் முடிவு வெளியாகும் வரையிலும் திருப்பூர் திரும்பாமல் இருந்தனர்.


பின்னலாடை நிறுவனங்கள்
இதனால் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவியது. இந்த நிலையில் ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்டத்திற்கு மீண்டும் திரும்பி உள்ளனர்.

திருப்பூர் ரயில் நிலையம் பாட்னா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த ரயில்களில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் இன்று திருப்பூர் திரும்பினர். இதனால் திருப்பூர் ரயில் நிலையம் முழுவதும் வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் காணப்பட்டனர்.
ரம்யா. S
எழுத்தாளர் பற்றி
ரம்யா. S
நான் ரம்யா தமிழ் இலக்கியம் கற்றுள்ளேன். ஊடகம் மீதான ஆர்வத்தால் இதழியல் துறையை தேர்ந்தெடுத்தேன். இரண்டு வருடம் பத்திரிகை துறையில் அனுபவம் உள்ளது. ஊடகம் சார்ந்த எனது பார்வையை விரிவுபடுத்தி அதில் அனுபவம் பெரும் நோக்கோடு தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் டிஜிட்டல் ஊடகத்தில் இணைந்துள்ளேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்