ஆப்நகரம்

karungali malai : கருங்காலி மாலை அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடலாமா?

கருங்காலி மாலை ஆன்மிகம் மட்டுமின்றி மருத்துவத்துடனும் தொடர்புடைய அற்புதமான பொருளாகும். கிரகண நேரத்தில் கருங்காலி மரத்தால் செய்த உலக்கை மட்டுமே எவ்வித பிடியும் இல்லாமல் அப்படியே நிற்கும் ஆற்றல் பெற்றது. மற்ற எந்த மரத்திற்கும் இந்த சக்தி கிடையாது. தீய சக்திகளை நெருங்க விடாமல் செய்யும் ஆற்றல் கருங்காலி மரத்திற்கு உண்டு. அதனால் தான் இன்றும் கிராமங்களில் பெண் குழந்தைகள் பூப்படைந்தாலும், துக்க வீடுகளில் இடுகாட்டிற்கு சென்று திரும்பும் போதும் உலக்கையை தாண்டி வர வேண்டும் என்ற வழக்கம் வைத்திருக்கிறார்கள்.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 26 Jun 2024, 12:07 pm
தொழிலில் வெற்றியை தந்து, அனைத்து கனவுகளையும் நனவாக்கும் தன்மை கருங்காலி மாலைக்கு உண்டு. செவ்வாய் கிரகத்தின் அம்சம் கொண்டது என்பதால் பண பற்றாக்குறை, மன அமைதி ஆகியவற்றிற்கு குறைவு என்பது எப்போதும் ஏற்படாது. இந்த மாலையை பயன்படுத்தி ஆன்மிக பயிற்சி செய்யும் போது அளவில்லாத அற்புதங்களை பெற முடியும்.
Samayam Tamil karungali malai wearing rules can we wear this malai while eat non veg foods
karungali malai : கருங்காலி மாலை அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடலாமா?


கருங்காலி மாலை :

ஆன்மிக ரீதியாகவும் சரி, ஜோதிட ரீதியாகவும் சரி கருங்காலி மாலை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இதை முறையாக அணிபவர்கள் கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல்கள், நோய்கள், துன்பங்கள் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும். சமீப காலமாக இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கருங்காலி மாலை, பிரேஸ்லெட் ஆகியவற்றை அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே சமயம் கருங்காலி மாலை பற்றிய பல சந்தேகங்களும், கருங்காலி அணிவதற்கான விதிமுறைகள் பல குழப்பங்களும் பலருக்கும் இருந்து வருகிறது.

கருங்காலி மாலை பற்றிய சந்தேகங்கள் :

கருங்காலி மாலையை யாரெல்லாம் அணியலாம்? கருங்காலி மாலை அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடலாமா? இரவில் தூங்கும் போது கருங்காலி மாலையை அணியலாமா? கருங்காலி மாலையை அணிந்து கொண்டு தெரியாமல் அசைவம் சாப்பிட்டுட்டோ அல்லது துக்க வீட்டிற்கு சென்றாலோ என்ன செய்ய வேண்டும்? கருங்காலி மாலையை அணிவதற்கு ஏற்ற நாள் எது? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் பலரிடமும் இருந்து வருகிறது. அதற்கான விடைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

​கருங்காலி மாலையின் சிறப்புகள் :

கருங்காலி மரத்தின் மையப்பகுதியை வெட்டி, அதிலிருந்தே கருங்காலி மாலை உள்ளிட்ட பொருட்கள் செய்யப்படுகின்றன. காந்த சக்தி கொண்ட கருங்காலி மாலை தெய்வீக ஆற்றலையும், நேர்மறை ஆற்றல்களையும் ஈர்க்கும் திறன் கொண்டதாகும். இது காளி, பைரவர், செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிறைந்ததாகும். இதனால் கருங்காலி மாலையை அணிவதால் உடல் ஆரோக்கியம், மன வலிமை, உடல் வலிமை ஆகியவற்றையும் பெற முடியும். செல்வ செழிப்பை தரக் கூடியதாகும்.மன அழுத்தம், கவலைகள் போன்றவற்றை போக்கி, மன அமைதியை தரக் கூடியதாகும்.

செவ்வாய்கிழமையில் சொல்ல வேண்டிய 108 செவ்வாய் போற்றி

கருங்காலி மாலை சந்தேகங்களுக்கான பதில்கள் :

* கருங்காலி மாலையை ஆண்கள், பெண்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம். ஆன்மிகத்தில் தியானம் போன்ற பயிற்சிகளை செய்பவர்கள் இந்த மாலையை அணிந்தது சிறந்தது.

* கருங்காலி மாலையை வாங்கியதும் சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்து விட்டு, பிறகு பாலில் நனைத்து, மீண்டும் சுத்தமான தண்ணீரில் கழுவிய பிறகு, சுத்தமான துணியால் துடைத்து விட்டு, வீட்டில் இருக்கும் முருகன் படத்திற்கு அல்லது ஏதாவது ஒரு சுவாமி படத்திற்கு அணிவித்து, சிறிது நேரம் கழித்தோ அல்லது மறு நாளோ அணிய வேண்டும்.

* சனிக்கிழமை, செவ்வாய்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் கருங்காலி மாலையை அணிய துவங்கினால் அதற்குரிய முழு பலன்களும் கிடைக்கும்.

* கருங்காலி மாலை தெய்வீக தன்மை கொண்டது என்பதால் அசைவம் சாப்பிடும் நாட்கள், உடலுறவு கொள்ளும் நாட்கள், துக்க வீட்டிற்கு செல்லும் போதும் அணியக் கூடாது.

தூங்கும் போது கருங்காலி மாலை அணியலாமா ?

* தெரியாமல் கருங்காலி அணிந்து அசைவம் சாப்பிட்டோ, துக்க வீட்டிற்கு சென்று விட்டால், சுத்தமாக தலைக்கு குளித்து விட்டு, கருங்காலி மாலையை கழற்றி சுத்தமான நீர், மஞ்சள் நீர், பால் ஆகியவற்றைக் கொண்டு சுத்தம் செய்து விட்டு, அதற்கு பிறகு அணிவிக்கலாம்.

* அசைவம் சாப்பிட்ட பிறகு 8 முதல் 10 மணி நேரத்திற்கு பிறகே கருங்காலி மாலையை மீண்டும் அணிய வேண்டும்.

* கருங்காலி மாலை செம்பு, வெள்ளி அல்லது தங்க கம்பியால் பிணைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதாக இருந்தால் அதை இரவு தூங்கும் போதும் கழுத்தில் அணிந்து கொள்ளலாம். ஆனால் பெரும்பாலானவை பருத்தி நூலால் பிணைக்கப்பட்டு தயாரிக்கப்படுவதால் அவற்றை இரவு தூங்கும் போது அணியக் கூடாது.

* இரவில் தூங்குவதற்கு முன் கருங்காலி மாலையை கழற்றி, சுவாமி படத்தின் முன் வைத்து விட்டு, மறுநாள் காலையில் அணிந்து கொள்ளலாம்.

* தியானம், மந்திர ஜபம் போன்ற ஆன்மிக வளர்ச்சிக்கான விஷயங்களுக்கு கருங்காலி மாலையை பயன்படுத்துவதாக இருந்தால் 108 என்ற எண்ணிக்கையிலான மணிகளை தேர்வு செய்து வாங்குவது சிறப்பு. மற்ற பலன்களுக்காக அணிபவர்கள் எந்த எண்ணிக்கையில் வேண்டுமானாலும் அணியலாம்.

எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்