உலகை உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதல், நடந்து இன்றோடு 18 வருடம் ஆகிறது
உலகம் அதுவரை கண்டிதாத கொடூர தாக்குதல். இரட்டை கோபுரம், பெண்டகன், வெட்ட வெளியில் வெடித்துச் சிதறிய விமானம் எனத் தொடர்ந்து 4 இடங்களில் தாக்குதல். அமெரிக்க வரலாற்றின் கருப்பு தினம் செப். 11ஆம் தேதி.
உலகின் தூங்கா நகரம் என வருணிக்கப்படும் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் இதே தேதியில் 18 வருடங்களுக்குமுன். காலை 8:46 மணி, ரோட்டில் இருப்பவர்கள் அதிர்ந்து போய் வானளவு உயரத்தில் இருக்கும் இரட்டை கோபுரங்களை அதிர்ந்து பார்க்கிறார்கள். இந்த அதிர்ச்சிக்குக் காரணம், ஒரு விமானம் கட்டுப்பாட்டை இழந்து இரட்டை கோபுரத்தை நோக்கி பறக்கிறது என்பதாலே. சில நொடிகளில், இரட்டை கோபுரத்தின் வடக்கு கட்டிடத்தின் 93-99 இடைப்பட்ட பகுதியில் விமானம் மோதி வெடித்துச் சிதறியது.
Samayam Tamil
வாஷிங்கடன்னில் இருந்து லாஸ் ஏஞ்சலஸ் நகரத்துக்கு 81 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் பறந்த அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் தான் இரட்டை கோபுரத்தின் மீது மோதியது. தொடர்ந்து 18 நிமிடங்கள் இடைவெளியில், அதாவது காலை 9:03க்கு மற்றொரு விமானம் இரட்டை கோபுரத்தின் தெற்கு கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இந்த விமானமும் அதே வாஷிங்கடன் விமான நிலையத்தில் இருந்து 56 பயணிகள் மற்றும் 9 பணியாளர்களுடன் புறப்பட்டது.
இந்த தாக்குதலையடுத்து கட்டிடங்கள் மலமலவன சரியத் தொடங்கியது. தாக்குதல் காரணமாக இரட்டை கோபுரத்தில் ஏற்பட்ட தீ கொழுந்துவிட்டு எரிந்தது. நியூயார்க் வான் முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்தது. கட்டிடங்கள் தெருக்களில் சரியத் தொடங்கின. ஆயிரக்கணக்கான மக்கள் கட்டிடங்கள் சிக்கிக் கொண்டிருந்தது ஒருபுறமிருக்க, சாலைகளில் சென்றவர்கள் மீதும் கட்டிடத்தின் பாகங்கள் விழத் தொடங்கியது.
என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை. மற்றொரு விமானம் மீண்டும் வந்து தாக்குதல் நடத்தி விடுமா எனத் தெரியவில்லை. நகரம் முழுவதும் அழுகுரல். இந்த காட்சிகளை அமெரிக்காவிலிருந்து நியூஸ் சேணல்கள் நேரலை செய்தது. சற்று மணி நேர வித்தியாசத்தில் அடுத்த தாக்குதல் நடந்தது. ஆனால், இந்த முறை இரட்டை கோபுரத்தின் மீது அல்ல, அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகன் மீது. அமெரிக்கா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமே உறைந்து போனது. அனைவரும் இந்த தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்பு எது என்பதைத் தேடத் தொடங்கினர். தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது அல் கொய்தா. 19 பேரைக் கொண்டு இந்த தாக்குதலை அல் கொய்தா நடத்தியது. இந்த நேரத்தில் 4வதாக மற்றொரு விமானம் கடத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. எந்த இடத்தில் தாக்குதல் நடத்தும் என எதிர் பார்க்கப்பட்ட நேரத்தில் பென்சில்வேனியா மாகாணம் அருகே வெட்ட வெளியில் விழுந்து நொருங்கியது. இது குறித்து பின்நாளில், 4 வதாக கடத்தப்பட்ட விமானத்திலிருந்த தீவிரவாதிகளுடன், அதில் வந்த பயணிகள் சண்டையிட்டதன் காரணமாகவே வெட்ட வெளியில் விழுந்து நொறுங்கியது என அதிகாரிகள் கூறினர். இந்த விமானம் தாக்கச் சென்ற இடம் எது என விடை என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது. இதற்கிடையில், இந்த 4வது விமானம், இரட்டை கோபுர தாக்குதல், பெண்டகன் தாக்குதல் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அமெரிக்காவைச் சேர்ந்த சிலர் இதை அப்போது அமெரிக்க அதிபராகப் பொறுப்பு வகித்த புஷ் தான் செய்திருக்கிறார் என்றும் சிலர் குற்றம் சாட்டினர். இந்த தாக்குதல் தொடர்பாகப் பல ஆவணப்படங்கள் வெளி வந்தது. அல் கொய்தா அமைப்பின் தலைவன் ஒசாமா பின் லேடனை பிடித்து கொடுப்பவர்களுக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 25 மில்லியன் டாலரைச் சன்மானமாக வழங்குவதாக ஓர் அறிவிப்பை எப்பிஐ அப்போது வெளியிட்டிருந்தது.
அந்த தாக்குதலில் 19 தீவிரவாதிகள் உட்பட மொத்தம் 2, 996 பேர் உயிரிழந்தனர். தாக்குதலால் இரட்டை கோபுரத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்களில் 300 பேரும் உயிரிழந்தவர்களின் பட்டியலில் அடங்குவர். உலகில் பல நாடுகளைச் சேர்ந்தவர்களின் உயிர்களும் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த தாக்குதலால், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். தாக்குதலின்போது ஏற்பட்ட புழுதி புகை காரணமாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இப்போதும் அவதிப் பட்டு வருவதாக அமெரிக்கா 2011 ம் தேதி அறிவித்திருந்தது.
இந்த தாக்குதலை நடத்திய அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனை பாகிஸ்தானில் ஒரு சுரங்கத்தில் பதுங்கி இருப்பதை அறிந்து அமெரிக்கா அதிரடியாக விமானங்களின் மூலம் ராணுவத்தை அனுப்பி கொலை செய்தது. ஒசமா பின் லேடன் 2011ஆம் ஆண்டும் மே 2ஆம் தேதி கொல்லப்பட்டார். இந்த நாள் அமெரிக்காவின் வரலாற்றின் கருப்பு தினமாகவே மாறிப்போனது. இப்போதும் அந்த கொடூர தாக்குதல் காரணமாக அங்கு பலர் ஏதோ ஒரு வகையில் தவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
We use cookies and other tracking technologies to provide services in line with the preferences you reveal while browsing the Website to show personalize content and targeted ads, analyze site traffic, and understand where our audience is coming from in order to improve your browsing experience on our Website. By continuing to browse this Website, you consent to the use of these cookies. If you wish to object such processing, please read the instructions described in our privacy policy/cookie policy.