அதேபோல சில ராசி என்ன தான் துன்பத்தில் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் போலியாக புன்னகைப்பதும் உண்டு. அப்படிப்பட்ட 4 ராசிகள் யார் என தெரிந்து கொள்வோம்.
துலாம்
துலாம் ராசி சேர்ந்தவர்கள் தங்களின் உறவுகளில் நல்லிணக்கத்தையும், அமைதியையும் பேணுவதற்காக முயற்சிகளில் அதிகம் ஈடுபடுவார்கள். அதே சமயம் மற்றவர்களின் பிரச்சனைகளை குறித்து பெரிய அளவில் கவலைப்படுவதில்லை. குடும்ப உறவில் தன் துணையின் உறவில் அமைதியும், நெருக்கமும் இருக்க பல முயற்சிகளை செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். பிறரிடம் எந்த ஒரு சச்சரவுகளை தவிர்க்க பாடுபடுவார்கள்.
இதனால் குடும்பத்தில் சிலரின் செயல்பாடு மன வருத்தத்தையும் அல்லது காயத்தை ஏற்படுத்தினாலும், போலியான புன்னகைத்து அங்கிருந்து நகர்ந்து விடுவார்கள்.
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் இந்த தந்தை ராசிகளின் முன்னே!
விருச்சிக ராசி
விருச்சிக ராசி சேர்ந்தவர்கள் ரகசியமான மற்றும் கவர்ச்சியான ஆளுமைத் திறன் கொண்டவர்கள். இவர்கள் வாழ்க்கையில் தங்களின் உணர்வுகளைப் பெரிய அளவில் வெளிக்காட்டுவதில்லை. இதன் காரணமாக விருச்சிக ராசியினரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என பிறர் எளிதில் அறிந்து கொள்ள முடியாது. இவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற முகமூடியை அணிந்து நடிக்க கூடியவர்கள். இவர்கள் மனதில் எரிமலை வெடித்தாலும், சோகமான விஷயங்கள் நடந்தாலும் அதை வெளிப்படுத்தாமல், சிறு சிறு போலியான புன்னகையுடன் நகர்ந்து விடுவார்கள்.
வெற்றிலையில் மை போட்டது போல மனதை படிக்கும் மாமேதை ராசிகள்
மகர ராசி
மகர ராசி சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் லட்சியத்துடனும், சிறந்த நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடனும் உழைக்கக் கூடியவர்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என நினைக்க கூடியவர்கள். இதன் காரணமாக வாழ்க்கையில் பல நேரங்களில் உலக இன்பங்களை தியாகம் செய்கின்றனர். எவ்வளவு சிரமம் வந்தாலும் பிறரிடம் நாடகம் போட மாட்டார்கள். மேலும் தங்களின் சோகத்தை வெளிப்படுத்தி பிறரின் அனுதாபத்தைத் தேட விரும்ப மாட்டார்கள். இதன் காரணமாக சோகத்தை மறைத்து, முகத்தில் புன்னகை எனும் முகமூடி போட்டு வாழ்வார்கள்.
மீன ராசி
மீன ராசியினர் மிகவும் உணர்வு மற்றும் ஆழமான உணர்ச்சிகளை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் ஆழமான சிந்தனை மற்றும் குழப்பமான மனநிலையில் இருப்பார்கள். மீன ராசியினர் தங்களை சுற்றி உள்ள நபர்களிடம் அன்பும், அரவணைப்பும் காட்டக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலான நேரத்தில் கற்பனை உலகில் இருப்பார்கள். வாழ்க்கையில் கவலை அல்லது பிரச்சினைகள் என என்ன தான் புயல் வீசினாலும், அவற்றை வெளி காட்டாமல், பிறரிடம் போலியாக புன்னகைப்பது உண்டு.