இந்தியாவில் மற்ற போக்குவரத்து சேவைகளை விட ரயில்வே போக்குவரத்து மிகவும் பிரபலமாக உள்ளது. அதற்குக் காரணம் ஏழை எளிய மக்கள் கூட குறைந்த டிக்கெட் செலவில் எளிதாகப் பயணம் செய்ய முடிகிறது. அதோடு, ரயில்வே போக்குவரத்து சேவை பாதுகாப்பானது. அதோடு மிக வேகமாகவும் சௌகரியமாகவும் பயணிக்கலாம். பல்வேறு சலுகைகளும் வசதிகளும் இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர்.
ரயில் போக்குவரத்து சேவை மூலமாக இந்திய ரயில்வேயும் கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறது. பயணிகளுக்கான டிக்கெட் செலவு மட்டுமல்லாமல், விளம்பரங்கள், சுற்றுலா தொகுப்பு மற்றும் சரக்கு போக்குவரத்து சேவை மூலமாக நிறைய லாபம் ஈட்டுகிறது. ஒவ்வொரு மாதமும் சரக்கு போக்குவரத்து சேவையில் இந்திய ரயில்வே புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.
கடந்த ஜூன் மாதத்தில் 135.46 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றி இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது. இது கடந்த ஆண்டின் 123.06 மில்லியன் டன் சரக்குடன் ஒப்பிடும்போது சுமார் 10.07 சதவீதம் அதிகமாகும். 2023ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் ரூ. 13,316.81 கோடியாக இருந்த சரக்கு போக்குவரத்து வாயிலான வருவாய் இந்த 2024ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் ரூ. 14,798.11 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டை விட சுமார் 11.12 சதவீதம் அதிகமான அளவில் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் 60.27 மில்லியன் டன் நிலக்கரி, 8.82 மில்லியன் டன் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி, 15.07 மில்லியன் டன் இரும்புத் தாது, வார்ப்பிரும்பு, முடிக்கப்பட்ட எஃகு 5.36 மில்லியன் டன், சிமெண்ட் 7.56 மில்லியன் டன், உணவு தானியங்கள் 4.21 மில்லியன் டன், உரங்கள் 5.30 மில்லியன் டன், தாது எண்ணெய் 4.18 மில்லியன் டன், கொள்கலன்களில் 6.97 மில்லியன் டன் மற்றும் மீதமுள்ள பிற பொருட்களில் 10.06 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. இந்த ஜூலை மாதத்திலும் சரக்குப் போக்குவரத்து வாயிலாக இந்திய ரயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில் போக்குவரத்து சேவை மூலமாக இந்திய ரயில்வேயும் கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறது. பயணிகளுக்கான டிக்கெட் செலவு மட்டுமல்லாமல், விளம்பரங்கள், சுற்றுலா தொகுப்பு மற்றும் சரக்கு போக்குவரத்து சேவை மூலமாக நிறைய லாபம் ஈட்டுகிறது. ஒவ்வொரு மாதமும் சரக்கு போக்குவரத்து சேவையில் இந்திய ரயில்வே புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.
கடந்த ஜூன் மாதத்தில் 135.46 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றி இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது. இது கடந்த ஆண்டின் 123.06 மில்லியன் டன் சரக்குடன் ஒப்பிடும்போது சுமார் 10.07 சதவீதம் அதிகமாகும். 2023ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் ரூ. 13,316.81 கோடியாக இருந்த சரக்கு போக்குவரத்து வாயிலான வருவாய் இந்த 2024ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் ரூ. 14,798.11 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டை விட சுமார் 11.12 சதவீதம் அதிகமான அளவில் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் 60.27 மில்லியன் டன் நிலக்கரி, 8.82 மில்லியன் டன் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி, 15.07 மில்லியன் டன் இரும்புத் தாது, வார்ப்பிரும்பு, முடிக்கப்பட்ட எஃகு 5.36 மில்லியன் டன், சிமெண்ட் 7.56 மில்லியன் டன், உணவு தானியங்கள் 4.21 மில்லியன் டன், உரங்கள் 5.30 மில்லியன் டன், தாது எண்ணெய் 4.18 மில்லியன் டன், கொள்கலன்களில் 6.97 மில்லியன் டன் மற்றும் மீதமுள்ள பிற பொருட்களில் 10.06 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. இந்த ஜூலை மாதத்திலும் சரக்குப் போக்குவரத்து வாயிலாக இந்திய ரயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.