Please enable javascript.Salem AIADMK leader massacred - சேலத்தில் அதிமுக பிரமுகர் சண்முகம் வெட்டி படுகொலை... உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள் மற்றும் தொண்டர்கள்!

சேலத்தில் அதிமுக பிரமுகர் சண்முகம் வெட்டி படுகொலை... உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள் மற்றும் தொண்டர்கள்!

Authored byமதுமிதா.M | Samayam Tamil 4 Jul 2024, 12:42 pm
Subscribe

சேலத்தில் அதிமுக பிரமுகர் சண்முகம் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது, அங்கு அதிமுகவினர் மற்றும் குடும்பத்தினர் குவிந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்:

  • சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி
  • சேலம் அதிமுக பிரமுகர் சண்முகம்
  • அதிமுக பிரமுகர் சண்முகம் படுகொலை
  • சேலம் அரசு மருத்துவமனையில் குவிந்த தொண்டர்கள்
அதிமுக பிரமுகர் வெட்டி கொலை
அதிமுக பிரமுகர் வெட்டி கொலை
அதிமுக செயலாளர்
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியில் அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்தவர் சண்முகம். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை அதாவது நான்கு ஆண்டுகள் சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். இவர் அதிமுகவில் நடக்கக்கூடிய அனைத்து பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொள்வார் என கூறப்படுகின்றது.

அதிமுக பிரமுகர் வெட்டி கொலை


அதிமுக பொதுச்செயலாளர் வரை நற்பெயரை பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் தனது பணிகளை முடித்துக் கொண்டு தாதகாப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார், அப்போது அவருடைய இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் சுற்றி வளைத்தனர். திடீரென மர்ம நபர்கள் அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர்.


அதிமுக தொண்டர்கள் போராட்டம்

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சண்முகத்தின் குடும்பத்தினர் உட்பட அதிமுக தொண்டர்கள் என அனைவரும் அப்பகுதியில் குவிந்தனர். முக்கிய பொறுப்பில் இருந்தவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகொலை செய்யப்பட்டது குறித்து நான்கு மணி நேரம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் அரசு மருத்துவமனை

போலீசார் அங்கு மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து சண்முகத்தின் சடலத்தை எடுக்க விடாமல் கொலைக்கான காரணமும் குற்றவாளிகளும் கைது செய்ய வேண்டும் என தொடர் முழக்கமிட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த பிறகு சண்முகத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

போலீசார் பாதுகாப்பு பணி

பிரேத பரிசோதனைக்கான அனைத்து ஏற்பாடுகளும் சேலம் அரசு மருத்துவமனையில் நடைபெற்று வந்த நிலையில் திடீரென அதிமுகவினர் ஏராளமானோர் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போராட்டம்

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அதிமுகவினரும் சண்முகத்தின் குடும்பத்தினரும் ஒன்று சேர்ந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் மட்டுமே சடலத்தை வாங்குவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு

5 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து அடிப்படை போலீஸார்கள் வெவ்வேறு கோணத்தில் அதிமுக உறுப்பினர் சண்முகம் ஏன் படுகொலை செய்யப்பட்டார் என விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை செய்யப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த பகுதியில் நடமாடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தனிபடை போலீசார் விசாரணை

இன்று மாலைக்குள் குற்றவாளியை கைது செய்வோம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் அரசு மருத்துவமனை சுற்றிலும் அதிமுக தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு சண்முகத்தின் உடல் அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
மதுமிதா.M
எழுத்தாளர் பற்றி
மதுமிதா.M
நான் மதுமிதா கணினி அறிவியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால் கடந்த 1 ஆண்டு காலமாக பணிபுரிந்து வருகின்றேன். க்ரைம், சினிமா, தேசிய செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. தற்பொழுது டைம்ஸ் ஆப் இந்தியா சமயம் தமிழில் பணியாற்றி வருகின்றேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்