இது நீண்ட நாட்கள் தொடர்வது திருமண உறவை முடிவின் எல்லைக்கே கொண்டுச் சென்றுவிடும். எனவே, அந்த மாதிரியான சூழ்நிலையில் ஜோடியாக ஒரு டூர் போய்ட்டு வாங்க. இது இருவருக்கும் இடையே ஒரு புதிய அனுபவத்தை அளிக்கும். மேலும், உணர்ச்சி மற்றும் உளவியல் ரீதியாகவும் பல நன்மைகளையும் வழங்குகிறது.
இடைவெளியை குறைக்கும்
![இடைவெளியை குறைக்கும் இடைவெளியை குறைக்கும்](https://static.langimg.com/thumb/111467472/samayam-tamil-111467472.jpg?imgsize=2717168&width=680&resizemode=3)
இருவருக்கும் பிடித்த அல்லது செல்ல வேண்டும் என்று நினைத்த இடங்களுக்கு ஜோடியாக சென்றுவருவது, அவர்களின் அன்றாட பொறுப்பு சுமைகளில் இருந்து விலக்கி, உறவில் மட்டுமே கவனம் செலுத்த வைக்கும். இது இருவருக்கும் இடையே உள்ள காதலை மேலும் அதிகப்படுத்தவும், இடைவெளியை குறைக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் மற்றும் பழைய பிரச்சனைகளை மறக்கவும் உதவும்.
குவாலிட்டி டைம்
![குவாலிட்டி டைம் குவாலிட்டி டைம்](https://static.langimg.com/thumb/111467469/samayam-tamil-111467469.jpg?imgsize=803229&width=680&resizemode=3)
திருமணத்திற்கு பிறகு குடும்ப பொறுப்புகளால், இருவரும் இணைந்திருக்கும் நேரம் குறைகிறது. அந்த சமயத்தில், ஒரு வெக்கேஷன் செல்வது இருவரும் ஒன்றாக நேரம் செலவிடுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். இது அவர்களின் பிணைப்பை வலுப்படுத்தவும், பரஸ்பர புரிதலை ஆழப்படுத்தவும் உதவும்.
மன அழுத்தத்தை குறைக்கும்
![மன அழுத்தத்தை குறைக்கும் மன அழுத்தத்தை குறைக்கும்](https://static.langimg.com/thumb/111467466/samayam-tamil-111467466.jpg?imgsize=1260845&width=680&resizemode=3)
குடும்ப பொறுப்புகளால் மன அழுத்தத்தில் இருக்கும் இருவருக்கும், நீண்ட பயணம் மகிழ்ச்சியையும், அமைதியையும் தரக்கூடியது. மனதிற்கு தேவையான ஓய்வை அளிக்கிறது. இது இருவருக்கும் உள்ள மன அழுத்தங்களை போக்கி புத்துணர்ச்சியை வழங்குகிறது.
அழகான தருணம்
![அழகான தருணம் அழகான தருணம்](https://static.langimg.com/thumb/111467463/samayam-tamil-111467463.jpg?imgsize=1366751&width=680&resizemode=3)
ஜோடியாக பயணம் செய்வதன் அற்புதமான பகுதி என்னவென்றால், வாழ்க்கை முழுவதும் நினைவில் வைத்திருக்கக்கூடிய விலைமதிப்பற்ற நினைவுகளை உருவாக்குவது தான். தம்பதியாக ஒரு வெகேஷன் சென்றுவரும் போது நிறைய அழகான தருணங்களை அனுபவிக்க முடியும், அவை அனைத்தும் வாழ்க்கை முழுவதும் அழியாத நினைவுகளாக மனதில் எப்போதும் இருக்கும்.
நம்பிக்கையை அதிகரிக்கும்
![நம்பிக்கையை அதிகரிக்கும் நம்பிக்கையை அதிகரிக்கும்](https://static.langimg.com/thumb/111467462/samayam-tamil-111467462.jpg?imgsize=916250&width=680&resizemode=3)
பழக்கமே இல்லாத புதிய இடங்களுக்கு செல்லும்போது தம்பதிகளாக நீங்கள் ஒருவரைவொருவர் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இது இருவருக்கும் இடையே பிணைப்பு மற்றும் நம்பிக்கையை அதிகரிக்க செய்யும். மேலும், மனைவி ஆசைப்பட்டு ஒரு பொருளை கேட்க அதை கணவர் பூர்த்தி செய்வது வைப்பதும், இருவருக்கும் இடையே பரஸ்பர நல்லுறவை மேம்படுத்தும்.