Please enable javascript.riyan parag for not supporting india in t20 wc 2024 fans slams: ‘அந்த தேசவிரோதி இளம் வீரரை’.. உடனே இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும்: பிசிசிஐக்கு பறக்கும் அதிரடி புகார்கள்!

‘அந்த தேசவிரோதி இளம் வீரரை’.. உடனே இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும்: பிசிசிஐக்கு பறக்கும் அதிரடி புகார்கள்!

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 2 Jul 2024, 10:55 am
Subscribe

அந்த தேசவிரோதி வீரரை, உடனே இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

riyan parag for not supporting india in t20 wc 2024 fans slams
‘அந்த தேசவிரோதி இளம் வீரரை’.. உடனே இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும்: பிசிசிஐக்கு பறக்கும் அதிரடி புகார்கள்!
இந்திய அணி குறித்த கேள்விக்கு, சர்ச்சைக்குறிய வகையில் பதில் அளித்த இளம் வீரரை உடனே அணியில் இருந்து நீக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

டி20 உலகக் கோப்பை:

டி20 உலகக் கோப்பை:

சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில், தொடர்ந்து அபாரமாக செயல்பட்ட இந்திய அணி, ஒரு தோல்வியை கூட சந்திக்காமல், இறுதியில் கோப்பையையும் வென்று அசத்தியது.

ஜிம்பாப்வே தொடர்:

ஜிம்பாப்வே தொடர்:

இதனைத் தொடர்ந்து, இந்திய அணி அணியானது ஜிம்பாப்வே சென்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற இளம் வீரரை, உடனே அணியைவிட்டு நீக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

ரியான் பராக்:

ரியான் பராக்:

அந்த இளம் வீரர் ரியான் பராக் தான். ஐபிஎல் 17ஆவது சீசனில், 16 போட்டிகளில் 573 ரன்களை குவித்து அதிரடி காட்டியதால், ரியான் பராக்கிற்கு, ஜிம்பாப்வே டி20 தொடரில் இடம் கிடைத்தது.

ரசிகர்கள் கேள்வி:

ரசிகர்கள் கேள்வி:

இந்நிலையில், டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இந்திய அணி தொடர்ந்து அபார வெற்றிகளை பெற்று வந்தபோது, சமூக ஊடகம் மூலம் பராக்கிடம், ‘‘இந்திய அணி விளையாடும் போட்டிகளை பார்த்தீர்களா? அதுகுறித்து உங்கள் கேள்வி என்ன?’’ என ரசிகர் கேட்டார்.

பராக் பதில்:

பராக் பதில்:

இதற்கு பதில் அளித்த ரியான் பராக், ‘‘நான் டி20 உலகக் கோப்பை தொடரை பார்ப்பது கிடையாது’’ என சர்ச்சைக்குறிய வகையில் பதில் அளித்தார். இது ரசிகர்கள் மத்தியில் கடும் கண்டனங்களை பெற்று வருகிறது.

பிசிசிஐக்கு பறக்கும் கடிதங்கள்:

பிசிசிஐக்கு பறக்கும் கடிதங்கள்:

இந்நிலையில், ரியான் பராக்கை ஜிம்பாப்வே தொடரில் ஆடவிடக் கூடாது, அவரை இனி இந்திய அணியில் சேர்க்க கூடாது என ரசிகர்கள் பலர், மெய்ல் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும் பிசிசிஐக்கு கடிதம் எழுதி வருகிறார்கள்.

ஆதங்கப்படும் ரசிகர்கள்:

ஆதங்கப்படும் ரசிகர்கள்:

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி ஆடும் விதம் குறித்து கேட்டால், அதற்கு திமிராக பதில் அளித்திருக்கிறார். இந்திய அணியை மதிக்காத, இந்தியாவை மதிக்காத அவர் தேசவிரோதி. இவரை, இனியும் அணியில் வைத்துக்கொள்ள கூடாது என பலர் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

வாழ்த்து சொல்லவில்லை:

வாழ்த்து சொல்லவில்லை:

சமூக ஊடங்களை பயன்படுத்தி வரும் ரியான் பராக், இந்திய அணி வெற்றியைப் பெற்றது குறித்து கூட வாழ்த்து சொல்லவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் கோலிக்கு வாழ்த்துசொன்ன ரியான் பராக், இந்திய அணி குறித்து பதிவிடாதது, ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி வருகிறது.

மதுரை சமயன்
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்