Please enable javascript.Heavy rains are lashing Chennai and its suburbs with strong winds: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை! அம்பத்தூரில் மின்வெட்டு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை! அம்பத்தூரில் மின்வெட்டு!

Authored byஅன்னபூரணி L | Samayam Tamil 4 Jul 2024, 11:58 am
Subscribe

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக அம்பத்தூர் பகுதிகளில் சில இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

chennai rains
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை
சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை:

சென்னை நகரின் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.



மேலும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கேடிசி மற்றும் தென் சென்னை ஈசிஆர் ஓஎம்ஆர் சிறுசேரி சோழிங்கநல்லூர் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மிக கனமழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் இன்று இரவு சுமார் 9.30 மணி முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக ஆவடி, பூந்தமல்லி, மீஞ்சூர், திருவேற்காடு, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மேலும் விமான நிலையம் பகுதியை அடுத்துள்ள அனகாபுத்தூர், அம்பத்தூர், பாடி, கொரட்டூர் பகுதிகளிலும் தற்போது மழை பெய்து வருகிறது.

இது மட்டுமில்லாமல் காட்டுப்பாக்கம், மாங்காடு, குமணன்சாவடி உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் மிதமான மழை பெய்கிறது.

சில இடங்களில் மின்வெட்டு:

இந்த கன மழை காரணமாக அம்பத்தூர் பகுதிகளில் சில இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், இருங்காட்டுக்கோட்டை பகுதிகளிலும் தற்போது மழை பெய்து வருகிறது. சிப்காட் பகுதி, ஒரகடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

கடுமையான போக்குவரத்து நெரிசல்:

மேலும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தபடி இருந்தது.

மேலும் கோவையில் இருந்து வந்த இண்டிகோ விமானம் மற்றும் அபுதாபி விமானம் தரையிறங்க முடியாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இரவு பெய்த கனமழை காரணமாக சைதாப்பேட்டை, கிண்டி, அண்ணா நகர், அண்ணா சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட நேரமாக ஊர்ந்து சென்றது.
அன்னபூரணி L
எழுத்தாளர் பற்றி
அன்னபூரணி L
அன்னபூரணி: ஆங்கில இலக்கியம் மற்றும் ஊடகவியல் துறை பட்டதாரி. அரசியல், கிரைம், சினிமா, பொது செய்திகள், ஆன்மீக செய்திகளில் ஆர்வம் அதிகம். எழுதுவதிலும், புத்தகம் வாசிப்பதிலும் அலாதி பிரியம் உண்டு. ஒரு பயிற்சியாளராக சமயம் தமிழில் எனது முதல் பயணத்தை தொடங்கி, தற்போது ஒரு வருடத்திற்கும் மேலாக மாவட்ட செய்திகளை எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்